Pages

Tuesday, December 28, 2010

We Ate Poison - Follow up

 நமது சென்ற We Ate Poison பதிவில் நாம் உண்ணும் உணவில் விஷம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பதை Outlook ன் முந்தைய கட்டுரையை மேற்கோள் காட்டி சொல்லி இருந்தோம்.

தற்போது அதற்கேற்றார்போல் கேரளாவில் பிரபலமான பத்திரிக்கையான Manorama online ல் கடந்த டிசம்பர் 20ம் தேதி அதே போன்றதொரு கட்டுரை வந்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார், அவரை நான் அதை மொழிபெயர்த்துக் கேட்டேன் முடியவில்லை வேலைப் பளு காரணம் என்றார். ஆனால் அதற்க்குண்டான சுட்டியை(மலையாளத்தில் அதை பார்க்க இங்கே சுட்டவும்) அனுப்பித் தந்திருந்தார் அதற்க்காக அவருக்கு நன்றிகள் பல.
 
அதேபோல் விகடனில் எழுதிவரும் சாரு நிவேதிதா அவர்களும் கேரளாவில் எண்டோசல்பான் என்ற பூச்சிமருந்தை குறிப்பிட்டு கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு எடுத்த முயற்ச்சியின் காரணத்தால் அங்கு அந்த மருந்தை தடை செய்ததாக எழுதியிருந்தார்.

மிகவும் மகிழ்ச்சி,

மற்றெல்லோரும் விழித்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் என்ன முயற்சி செய்வான் என்று தெரியவில்லை. 

முயற்சி செய்து ஏதாவது உருப்படியாக செய்தால் நன்றாக இருக்கும்.

அல்லது இயற்கை வேளாண்மைக்கு அனைவரும் திரும்பினாலும் மிகவும் நன்றாக இருக்கும், வயதானவர்கள் சொல்வார்கள் முன்பிருந்தது போல ஏது இப்போதுள்ள உணவில் சத்து கிடைக்கிறது என்பர். அந்த காலத்தில் நடந்த இயற்கை வேளாண்மையால் உடம்பிற்க்கு சத்து நிறைய, அதனால் கடின உழைப்பு செய்ய முடிந்தது, ஆனால் இப்போது சட்டி சோறு திண்ணாலும் அரை கிலோமீட்டர் கூட ஓட முடியவில்லை.
              
 என்ன செய்வது நாம் பருகும் நீர், உண்ணும் உணவு அனைத்திலும் விஷம், அதன் காரணத்தால் நிறைய மனிதர்களுக்கு உள்ளத்திலும் விஷம்......

நன்றி: சாரு நிவேதிதா, Manoramaonline.com




Friday, December 24, 2010

ஒபாமாவுக்காக ஒரு உடான்ஸ் கிராமம்

நமது மண் கெட்டு விடக்கூடாது, இராசாயண விவசாயம் ஆபத்தானது, இயற்கை விவசாயம் நன்மை பயக்க வல்லது, மக்கள் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என்று யார் பிராயசப்படுவார்கள் இந்த உலகைப் பற்றிய கவலை, மக்களைப் பற்றிய கவலை உள்ளவர்கள்தான்.

ஆனால் சமீபத்தில் இந்தியா வந்து சென்ற ஒபாமாவிடம் நாடும் நாட்டு மக்களும் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்று ஏன் அவரிடம் காட்டவேண்டிய அவசியம் வந்ததென்று தெரியவில்லை.

உலகில் மிக அதிகமாக காற்று மண்டலத்தை மாசுப்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா, மாசு படுத்துதலை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இன்றுவரை கையெழுத்து போட மறுத்து வருகிறது அமெரிக்கா. 

சமீபத்தில் தென் அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலக கூட்டத்தில் கூட எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்திருக்கிறது அக்கூட்டம்.

இதெல்லாம் இப்படி இருக்க ஒபாமாவுக்கு காட்டுவதற்க்காக இந்தியாவின்  மையத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது ஒரு கூத்து.

சமீபத்தில் பசுமை விகடன் 10/12/10ல் பக்கம் 16ல் வெளிவந்த கட்டுரைதான் மேலே உள்ள தலைப்பு.

கான்புறா..................அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக வீடியோ கான்ஃபரஸிங்கில் பேச வேண்டி தயாரிக்கப் பட்ட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாக இந்த கிராமத்தில் உள்ளவர்களுடன் உரையாடியதால் உலகப்புகழ் பெற்றுவிட்டது இவ்வூர்.

நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி செய்து கொடுக்க திட்டம் வகுத்துள்ளது மத்திய அரசு அதை ஒபாமாவிடம் காட்ட இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதற்காக காண சென்றனர் குழுவினர்.

அவர்களுடன் அவ்வூர் வாசிகள் பேசியுள்ளனர் உண்மைகளை.

ஊரோ காய்ந்து, ஏரிகளோ வரண்டு போயுள்ள ஒரு கிராமம்.

பஞ்சாயத்து செயலாளர், ஒரு நர்ஸ், ஒரு M.B.A. மாணவர் என மூவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேசிய அன்று பகலில் மின்சாரம் இருந்தது ஆச்சர்யம்!!

ஊரின் விவசாயம் செழிப்பதற்கு எந்த வழியும் இல்லை, கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை.

ஊரின் சுகாதர நிலையத்தில் உள்ள ஆண் நர்ஸ் சந்தர்லால் 7000 பேர் இருந்தும் ஒரு மருத்துவர் இல்லை, நான் தான் நோயாளிகளுக்கு முடிந்த வரை சிகிச்சை அளிக்கின்றேன், அவசரம் என்றால் 10 கி.மீ செல்ல வேண்டும் மருத்துவரைப் பார்க்க. என்கிறார்.

உண்மை இப்படி இருக்க டெலிமெடிசன் உதவியால் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஒபாமாவிடம் பேசிய நர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேரில் போய் சொன்னாலே தண்ணீர்  கைப்பம்புகளை ரிப்பேர் பார்க்க ஆட்கள் வருவதில்லை ஆனால் ஊர் பஞ்சாயத்து செயலரோ இ-மெயிலில் புகார் அனுப்பிய உடனே புகார்கள் சரி பார்க்கப் படுவதாக சொல்லியுள்ளார் ஒபாமாவிடம்.

இது எப்படியிருக்கு...

ஏன் இப்படி நாடகமாட வேண்டும் என்று தெரியவில்லை, இந்தியாவின் இதயப்பகுதியில் உள்ள இக்கிராமத்தினர் சொல்கின்றனர் ஒபாமா பேசிய அன்றுதான் நாங்கள் வாக்களித்த மந்திரியை பார்க்க முடிந்தது என்று .

சரி, இப்படியெல்லாம் செய்து காண்பித்ததால் என்ன கிடைத்து விடப் போகிறது இந்தியாவிற்கு? ஆனால் வந்தவரோ 20,000 வேலை வாய்ப்புகளை வாங்கிச் சென்றிருக்கிறார் அவரது நாட்டிற்க்கு.

இந்தியா வேளாண்மை விவசாயத்தில் சிறந்து விளங்குகின்றது என்பதை பறை சாற்றவா? இந்திய அரசியல்வாதிகள் வேளாண் நிலங்களை பண்ணாட்டு கம்பெனிகளுக்கு பங்கு வைப்பதைப் பற்றி தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.

ஆக இந்தியாவை சுரண்டி சுரண்டி சுடுகாடு ஆக்கிவிடுங்கள்.



நன்றி : பசுமை விகடன் மற்றும் குழுவினர்









Thursday, December 23, 2010

பேரரசர்கள் அழுவதில்லை

அன்பு நண்பர்களே,

பேரரசர் பகதூர் ஷா ஜாபர்அவர்கள் இந்தியாவை ஆண்டு வந்த சமயம், 

வெள்ளையர்களுக்கு கட்டுப்படாத ஒரு ஆட்சி,

முடிவெடுக்கிறார்கள். வெள்ளையர்கள் போர் செய்து ஒடுக்குகிறார்கள் அவரை, கைது செய்து நாடு கடத்தப் படுகிறார்,

அரசரும் அவரது புதல்வர்களும் கப்பலில் பர்மா அல்லது மியான்மர் கல்கத்தா மார்க்கமாக கொண்டு செல்லப் படுகிறார். 

அவருக்குத் தெரியும் நாம் திரும்பி வரமாட்டோம் என்று அதனால் தான் ஆட்சி செய்த நாட்டின் மீது அளவிளாத அன்பின் காரணத்தால் போகும் போது ஒரு கைப்பிடி இந்திய மண்ணை எடுத்துச் செல்கிறார்.

கப்பலில் பேரம் நடக்கிறது அவரை அடிபணிய வைக்க, மிரட்டப்படுகிறார். தங்களுக்கு கப்பம் கட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைக் காட்டப் படிகிறார், தனது புதல்வர்களை கொன்று விடுவதாகவும் பயமுறுத்தப்படுகிறார்.

மசியவில்லை.

சிறிது நேரம் கழித்து அவருக்கு துணியால் போர்த்தப்பட்ட ஒரு தட்டு வருகிறது, ஆங்கிலேய அதிகாரி புன்னகையுடன் வந்து தட்டில் உள்ள துணியை அகற்றுகிறான்

தட்டில் தனது 2 புதல்வர்களின் தலை,, பேரரசர் பகதூர்ஷா அவர்கள் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

இதைக் கண்ட ஆங்கிலேய அதிகாரிக்கு ஆச்சர்யம், கோபம், வெறுப்பு, புதல்வர்களைக் கொன்றதன் மூலமும் அதை அவரிடமே காண்பித்தன் மூலமும் பகதூர்ஷாவை மனதளவில் காயப்படுத்த நினைத்த ஆங்கிலேய அதிகாரிக்கு அதிர்ச்சி, முகத்தில் எவ்வித மாற்றங்கலும் இல்லாமல் பகதூர்ஷா இருப்பதை கண்டு.

அதை பகதூர்ஷாவிடமே கேட்கிறான் நீங்கள் கலங்கவில்லையா, அழவில்லையா என்று அதற்கு பகதூர்ஷா அவர்கள் பதிலளிக்கிறார்கள் பேரரசர்கள் அழுவதில்லை. என்று

ஒரு கம்யூனிஸ்ட் சகோதரர் கூட்டத்தில் பேசியதிலிருந்து.....

Saturday, December 18, 2010

இன்றைய இளைஞர்களும் உலகாதாயக்கல்வியும் - பகுதி 2

    சென்ற பகுதியில் (சென்ற பகுதியை படிக்க) விவாதித்த இன்றைய இளைஞர்களுக்கு உலகாதாயக்கல்விதான் போதிக்கப்படுகிறது இந்நிலை நம்நாட்டிற்க்கு ஆபத்து இது போன்ற கல்விக் கொள்கை மனித தரத்தை சீழ் படுத்துமே அன்றி மேம்படுத்தாது என்று சொல்லி இருந்தோம் .

சென்ற பகுதியினை படித்த நண்பர்கள் பயனுள்ள கருத்துக்களை சொல்லி இருந்தார்கள் அது அவர்களின் சமுதாய அக்கரையைக் காட்டுகிறது. அவர்களுக்கு நன்றிகள் பல. 

நாம் சொல்ல வருவது என்னவெனில் தற்போதுள்ள பாடத்திட்டங்களில் வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படுவதில்லை உலகில் அம்மனிதன் வேலையோ அல்லது தொழில் தொடங்கவதற்க்கான கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது, ஏனெனில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல கல்விக்கூடங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே இயங்குகிறது, பாடத்திட்டங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே தயாரிக்கப்படுகிறது அதில் உருவாகி வரும் ஆசிரியர் என்ன போதித்து விடப்போகிறார், பின் வரும் சந்ததிகளின் நிலையும்.............அதேதான்..........

உதாரணத்திற்கு இந்த மாதத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் மாநிலம் தழுவிய பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது அதில் அங்கம் வகிக்கும் ஷங்கர் ராம சுப்பிரமணியத்திடம் சன் டே இந்தியன் இதழ் அவரிடம் பேட்டி காண்கின்றது அப்பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி இது தான் :- இன்றைய கல்வி முறையில் சுதந்திரமான சிந்தனையும் சமூக உணர்வும் உள்ள ஒரு குடிமகன் உருவாகும் சூழல் உள்ளதா?

பதில்: பகுத்தரிவுப்பூர்வமான, பல் திறன்களை வளர்க்கும் கல்விமுறை இப்போது இல்லை. இப்போதுள்ள பாடத்திட்டங்கள் மாணவர்களால் உருப்போடப்படுகிறது, அதை அப்படியே எழுதுங்கள், வேலைக்குப்போய் நன்கு சம்பாதியுங்கள் என்ற மனப்போக்கில்தான் கல்வு அமைப்பு இருக்கிறது


அவர் சொன்ன பதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது இந்தியாவின் கல்விக் கொள்கை எப்படி உள்ளது என்று, குழந்தைகளை பரிட்சைக்குத் தயார்ப் படுத்தவே ஆசிரியர்களும், பாடங்களும் அமைந்துள்ளனவேயன்றி அக்குழந்தைகளின் நல் வாழ்வுக்கு அவர்களின் நல்ல மன நிலைக்கு உதவவில்லை.

சென்ற கல்வியாண்டில் மட்டும் 250 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நீதிபதி தற்கொலை செய்துள்ளார், கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர்(Manager) தனக்கு ஏற்பட்ட சிக்கல்களினால் தற்கொலை செய்துள்ளார் இன்னும் எவ்வளவோ..... இதிலிருந்து என்ன தெரிகிறது,

மனிதன் படித்த படிப்பு அம்மனிதனது  சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வில்லை அதனால் அம்மனிதன் பாரிய, மீளா முடியாத துயரமான முடிவெடுத்து விடுகிறான். எவ்வளவு பெரிய இழப்பு. பெரும் படிப்பு படித்தவர்களின் இந்த முடிவினால் நாம் ஸ்தம்பித்துப் போகிறோம்.

இன்றுள்ள உலகில் உள்ள இளைஞர்களால் தன்னை பெற்றெடுத்த பெற்றோர்களை பேணிப் பாது முடிகிறதா? நம் எல்லோருக்கும் தெரிந்துதிருக்கும், சமீபத்திய ஆய்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் பெற்றவர்களை நிர்கதிகளாக்கும் நிலைமை தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதில் அதிகமான பாதிப்பிற்குள்ளானவர்கள் இருப்பது சென்னையில் தான், விருந்தோம்பலை ஓங்கிப்பிடிக்கும் தமிழகத்திற்க்குத்தான் இந்த நிலைமை, இது யாரால்,

தான் பாடுபட்டு, அலைந்து திரிந்து, என்னவெல்லாம் இன்னல்கள் உண்டோ அவ்வளவையும் சகித்து தான் பெற்ற பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படியாவது, எங்காவது பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பிள்ளையை ஆளாக்கிய நமக்கு என்ன நிலைமை? மகன் ஏதோ வெளிநாட்டில் இருப்பான் அவன் குடும்பத்தோடு, அவன் பிள்ளை குட்டியோடு. நாம் இங்கு நமக்கு வந்த வியாதிக்கு மருந்து வாங்குவதற்கு கூட வாசலில் யாராவது போகிறார்களா, யாராது வாங்கித் தருவார்களா என்ற ஏங்கும் நிலைமை.

அப்பிள்ளை படித்து மேல்நாட்டில் உடனே வேலை கிடைத்து, விசா கொடுத்து அழைத்துக் கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த படிப்பு படித்த பிள்ளைக்கு தெரிய வில்லை தான் அனுப்பும் பணம் அல்ல தன் பெற்றோர்கள் எதிர்ப் பார்த்தது என்று, அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பும், தள்ளாத வயதில் தனக்கு ஆதரவும் தான் அப்பெற்றோர்களுக்கு தேவையானவை என்று. அப்படிப்பு ஏன் சொல்லித்தர வில்லை அவ் வுண்மையை அவர்களுக்கு.

மற்றோரு நண்பர் சொன்னார் மாணவர்களுக்கு சமுதாய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை போதிக்கலாமென்று ஒரு வகையில் ஒத்து வந்தாலும் இதிலும் சில தவறுகளைக்காணலாம். உதாரணத்திற்க்கு கம்யூனிஸ்ட்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லலாம்,.. சே குவாரா(அவர் சுருட்டு குடிப்பதை நாம் நியாப்படுத்த வில்லை) போன்ற நல்ல தலைவர்களை உள்ளடக்கியதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம், ஆனால் அப்பேர் பெற்ற தலைவர்களை கொண்ட இன்றைய கம்யூனிஸ்ட்கள் அப்படி உள்ளனரா என்பது கேள்விகுறிதான், அதாவது அத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தனி மனித ஒழுங்கிற்க்கு, வாழ்க்கைக்கு உதவுகிறதா என்பதுதான் கேள்வி?
  








Thursday, December 9, 2010

We Ate Poison

          15 வருடங்களுக்கு முன்னால் Outlook பத்திரிக்கையில் ஒரு அட்டை பட கட்டுரை.    தலைப்பு இதுதான் “ நாம் விஷத்தை உண்கிறோம்” என்று.    அப்பொழுது அதிக ஆங்கில அறிவு இல்லாததனால் அக்கட்டுரையின் முழுக் கருத்தை அறிய முடியவில்லை.

           ஆனால் கருத்து இதுதான் நாம் சாப்பிடும் உணவு அனைத்திலும் நச்சுப்பொருட்கள் உள்ளன என்று.     அப்பத்திரிக்கையின் அட்டைபடத்தையே அழகாக சித்தரித்திருப்பர். காய்கறிகள்,மீன் மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் மண்டை ஓட்டு வடிவில் அமைத்திருப்பர்.  பார்க்கவே பயமாக இருக்கும்.

இப்பொழுதும் பயம்தான் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையில்.

ஆனால் இப்பொழுது விவாதிக்க வேண்டியதே வேறு விடயம்.  ஆம்.    எப்படி நாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளது என்று.    

 நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.

         ஏதேச்சையாக நான் சேர்ந்ததோ இளங்கலை சுற்றுப்புற அறிவியல் பாடத்தில்  போதாதா பின்னே இவ்வுலகில் நிகழும், நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புற மாசுபடுதல் என்ன என்ன, எப்படி, எங்கே, யாரால் போன்ற பாடங்கள் பல..

அதில் ஒன்றுதான் Outlook பத்திரிக்கை சுட்டிக்காட்டிய உண்ணும் உணவில் விஷம்.       

நாம் வயல்களில் தெளிக்கும் பூச்சி மருந்துகளில் ஆரம்பிக்கின்றது விஷமம்.
ஆம்.  அப்பூச்சி மருந்துகள் இல்லாமல் நாம் நல்ல அருவடையை பார்க்க முடியாது, விளைச்சல் இருக்காது... அவ்வளவு ஏன் பொதிகை தொலைக்காட்சியிலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது இன்ன மருந்துகளை இன்ன காலங்களில் தெளிக்க வேண்டும் என்று.

சரி, அப்பூச்சு மருந்துகளை அத்தாவரமும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது, அவற்றை உண்ணும் கால்நடைகளின் கொழுப்பு 20% அந்த விஷத்தை சேமித்துக்கொள்கிறது, மீதியை அவ்விலங்கின் சிறு நீரகங்கள் வெளியேற்றி விடுகிறது. கால்நடைகள் தரும் பாலிலும் உள்ளது  அந்த பூச்சுக்கொல்லிகள்.

விளைய வைத்த அந்த தானியத்தையோ அல்லது அந்த கால்நடையையோ அல்லது பாலையோ அம்மனிதன் உண்ணும் போது அவ்வளவும் அம்மனிதனுள் இறங்குகிறது   ஆனால் கடவுளின் அற்புதங்களில் ஒன்றான நமது சுத்திகரிப்பு இயந்திரங்களான   சிறுநீரகங்கள் வெளியேற்றி விடுகின்றன,

இப்படி ஏதாவது ஒரு நாள் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இது இருந்ததென்றால்,   ஆம்.. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ளது இந்த Pesticides என்ற இந்த பூச்சிக்கொல்லிகள். அதனால் நமது சிறு நீரகங்களும் தொடர்ந்து பாடுபட்டு இதனை வெளியேற்றுகிறது.......ஆனால் ஒருநாள்.............அந்த சிறுநீரகங்களும் நின்று விடும். அவ்வளவுதான்....

மேலே உள்ளது எனக்கு தெரிந்த வகையில் நான் சுட்டிக்காண்பித்துள்ளேன். இதற்கு மேலும் இந்த சங்கிலித்தொடர் மிகப்பெரிதாகவும், பாதிப்புகள் பெரிதாகவும் இருக்கலாம்.


பூச்சிக்கொல்லிகளின் முழு விவரங்களும் அது மனிதன் உடம்பில் ஏற்படுத்தும் முழு பாதிப்புகளும் எனக்கு தெரியவரவில்லை. இதல்லாமல் இன்னும் என்னென வியாதிகளை மனிதனுக்கு ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. குழந்தைகளின் மூளைவளர்ச்சி, நம் உடலின் பாதிப்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தலாம்.

அதன் பாதிப்பினால்தான் புதுப்புது  நோய்கள், குறை பிரசவங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்னால் விமரிசையாக விற்கப்படும் குளிர் பானமொன்றில் இந்த பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக(!)(இந்தியாவில்) உள்ளன என்ற சர்ச்சைக் குள்ளானதை நாம் அறியலாம். 

சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேனிலும் இக்கலப்பு உள்ளன என்பதை சமீபத்திய ஆய்வுகள் சொல்லியதை நாம் அறியலாம்.

ஆக இதுதான் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இதன் பாதிப்புகள் உள்ளன. என்ன செய்வது. தீர்வு ஒன்றுதான் அதாவது இயற்கை உரங்களை இடவேண்டியதுதான். ஆனால் விளைச்சல்... தெரியாது....ஏற்கனவே விவசாய நிலங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தினால் விளைநிலங்கள் PLOT போட்டு விற்க்கப்பட்டு வருகின்றன, இதில் நாம் இதை சொன்னால்..யார் கேட்பார்கள்.

எனக்கு தெரிந்து 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு கடை எங்கள் நகரத்தில் இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட அரிசி மற்றும் சில தானியங்களை விற்று வந்தார். எனக்கு மகிழ்ச்சி அளித்தது அதை நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்தேன். வெளிநாடு போய்விட்டு தற்போது வந்து பார்த்தால் கடையை காணோம், ஆமாம் யார் வாங்குவார்கள் 5 ரூபாய் விலை கூட சாதாரண அரிசியை விட ..

நாம் இயற்க்கை உரங்கள் இட்டு உண்ணலாம் என்றால் ஆறுகள், குளங்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவப்பட்ட தொழிற்சாலைகளால் அல்லவா மாசடைகிறது அது கடலில் போய் முடிகிறது, அங்குள்ளதும் பாழாகிவிட்டது.. 

ஆக மனிதன் நிலம், நீர், கடல், காற்று என்று வரிசையாக வீணடித்துவிட்டான். வரும் சந்ததிகளை நினைத்தால் கவலைதான் தோன்றுகிறது. 

என்ன செய்ய என்னாலும் முழு சமுதாயத்தை மாற்றமுடியாதே, சமுதாய ஆர்வலர்கள், சுற்றுபுற ஆர்வலர்கள் கத்தினாலும் மற்ற மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை எங்கள் குரல்கள்., அல்லது நசுக்கப்படுகிறது.

ஏன் தான் சுற்றுப்புறத்தை பற்றி படித்தோம் என்றாகிவிட்டது, சுற்றுப்புறத்தையும் அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சொல்ல ஆரம்பித்தால் எதைச் சொல்ல, எதை விட...அவ்வளவு .

  உலகில் ஏற்படும் அதிக இறப்புகளுக்கு காரணம் அருந்தும் தண்ணீர் சுத்தமில்லாததே என்கிறது ஒரு ஆய்வு.

    எனக்கும் உணவு உண்ணும் முன் நினைவு வரும் என்ன செய்ய நானும் சாப்பிடத்தான் செய்கிறேன்.. ஏனெனில் எனக்கும் தகிக்கிறதே.......பசிக்கிறதே...................

நன்றி : Outlook

Monday, November 29, 2010

இன்றைய இளைஞர்களும், உலகாதாயக்கல்வியும்





       ண்பர் ஒருவர் ரொம்பவும் விமரிசையாகக் கருதப்படும் பொது தளமான Facebookல் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்தார். அதாவது ” எங்களுக்கு பாடத்திலும் சொல்ல வில்லை செய்முறையிலும் சொல்ல வில்லை சமுதாயத்தைப் பற்றி, நாங்கள் எதற்கு கவலை பட வேண்டும் நாங்கள் நன்றாக சம்பாதிப்போம் facebook போல பொதுதளத்தில் அரட்டை அடிப்போம், பதில் எழுதுவோம்,  அதாவது சமுதாயத்தை பற்றி எதுவும் சிந்திக்க தெரியாது எங்களுக்கு அது பற்றிய கவலையும் இல்லை என்ற தொனியில் கருத்து சொல்லியிருந்தார்.


இன்றைய சாதாரண இளைஞர்களின் நிலைமை இதுதான்

பிள்ளை பெற்று அதை ஆங்கிலேய பள்ளியில் சேர்த்து பின்பு சில வருடங்கள் கழித்து “என் பிள்ளை சரளமாக ஆங்கிலம் பேசுகிறான் பார்” என்றும் பிறகு அப்பிள்ளையை படாத பாடுபட்டு இப்பொழுது எந்த படிப்பு  அதிக லாபகரமானதோ அதை படிக்க வைத்து விடுகிறோம்,

நாம் பெற்ற பிள்ளைகள் நன்கு சிறந்து விள்ங்கவேண்டும் என்று எண்ணுவது தவறன்று எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் சிறந்து விளங்கத்தான் ஆசைப்படுவோம்.

படித்து வெளியில் வந்த அவன் உடனே கைநிறைய சம்பாதிக்க வேண்டும் மற்றும் “என் பிள்ளை States ல இருக்கான், Swiss ல இருக்கான் என்று நாம் பெருமையாக பேச வேண்டியும் நாம் அப்பிள்ளையை, படிப்பு உண்டு அவன் உண்டு என்று நாம் மிகவும் கண்டிப்புடன், அவனது குறிக்கோளை அவனிடம் விதைத்து, வளர்க்கிறோம்.


அதனால் அவன் சமுதாய அக்கறையோ அது பற்றிய பார்வையோ அல்லது சுற்றுபுறத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வளருகின்றான் அல்லது அது பற்றி தெரிந்துக்கொள்வதற்க்கோ வாய்ப்பில்லாமல் வளரலாம்.

இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் படிக்கும் படிப்பு., அவர்கள் படிக்கும் படிப்பு அவர்களுக்கு உதவாதேதே. அவர்களுக்கு உலகாதாயத்திற்க்குண்டான அதாவது Materialistic அல்லது பண ஆதாயத்திற்க்குண்டான படிப்பு மட்டுமே அவர்களுக்கு போதிக்கப்படுகிறது நம் இந்தியாவில் அல்லது உலகில்.

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது - இது சரிதான்.

எப்படி முன்னேறுவது, எப்படி மேலே வருவது, எப்படி பெரும் பணம் ஈட்டுவது என்பதிலேயே குறியாக உள்ள இப்படிப்பு அவர்களின் வாழ்க்கை என்று வரும்போது அம்மனிதன் திணருகிறான், திண்டாடுகின்றான்.ஏனெனில் சமுதாயத்தில் அவன் எப்படி வாழ வேண்டும், எப்படி மனதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதில் சரியாக கற்றுத்தேறாத ஒருவன், ஒரு பிரச்சினை என்று வரும்போது அம் மனிதன் முடிவெடுக்க திண்டாடுகிறான் அல்லது தவறான முடிவெடுத்து விடுகிறான்.

இன்றைய உலகாதயக்கல்வி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நாம் அறியாததல்ல உதாரணத்திற்கு சிலவற்றை சொல்லலாம் சமீபத்திய நம் நாட்டின் நிகழ்வுகளை,

வெளிநாட்டில் மேற் படிப்பு படித்த இரு இளைஞர்கள் பணத்திற்க்காக வேண்டி ஒரு குழ்ந்தையை கடத்துகின்றனர்.

படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய வாத்தியார்களே தன் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தைகளுடன் நடந்துக்கொண்ட சம்பவங்கள் நாம் அறியாததல்ல

காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளே பண்ணிய தப்புக்கள், RAW என்ற உளவுத்துறையில் தன் கீழ் பணியாற்றிய பெண்ணிடம் மேல் அதிகாரி நடந்துக்கொண்ட சம்பவங்கள்,

1000 கோடி வைத்துருக்கும் நபர் அல்லது ஒரு அரசியல்வாதி மேலும் மேலும் கோடிகளை அல்லது  லட்சம் கோடிகளை சுருட்டுவதும்

ஒன்றல்ல இரண்டல்ல சொல்வதாக இருந்தால் பக்கம் பக்கமாக சொல்லலாம்.

இங்கே இப்படியென்றால் வெளிநாடுகளில் நன்கு வளர்ந்த நாடுகளில் வேறுமாதிரி உள்ளது நிலைமை . எடுத்துக்காட்டாக நேரத்தை மிச்சப்படுத்தி அதை உழைப்பில் ஈடுபடுத்தி முன்னேறிய ஜப்பானில் நிகழும் தற்கொலைகள். உலகிலேயே அதிகம் தற்கொலைகள் ஜப்பானில் நிகழ்வதாக சொல்லப்படுகிறது, நம் இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் அதிகம் படித்த மக்கள் உள்ள கேரள மாநிலத்தில் நிகழ்வதாக சொல்கிறது ஒரு ஆய்வு. ஆக எங்கும் படித்தும் அறியாமை என்னும் இருள்.

படித்தென்ன பயன்? அவர்கள் படித்த படிப்பு என்ன சொல்லிற்று, அவர்கள் மனதை அது பக்குவபடுத்த வில்லை. அதனால் தான் சமுதாயத்தில் உயர்ந்த படிப்பு படித்து உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களே மிகப் பெரிய தவறுகளை செய்கின்றார்கள்.

பிரச்சினை இதனால்தான் உலகாதயக்கல்வி, படி படி என்று படித்தும், மிக உயர்ந்த இடத்திற்காக வேண்டி உழைத்தும் அந்த இடத்தை அடைந்த பிறகு அப்படிப்பு அம்மனிதனது வாழ்விற்க்கு உதவவில்லை, அன்றாட வாழ்வில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுக்குண்டான தீர்வை அக்கல்வி அம்மனிதனுக்கு வழங்காத காரணத்தினால் அவன் சில விடயங்களில் தவறான முடிவுக்கோ, அல்லது தனது மனோ இச்சைக்கோ வீழ்ந்துவிடுகின்றான், தவறு செய்கிறான்.

பின்பு எங்கே அவன் சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பது? மற்ற விஷயங்களில் அவன் கவனம் கொண்டு பார்ப்பது? இவ்வகையான படிப்பு மனித வாழ்வுக்கு பயன்படாது, இவ்வகையான படிப்பு எந்த வித ஊழலையும் தடுத்து நிறுத்தாது மேலும் அது மகா கடுமையான ஊழலுக்கு அம்மனிதனை தூண்டுமே தவிர நிச்சயமாக அடித்துச் சொல்லலாம் இவ்வகையான கல்வி ஊழலை தடுத்து நிறுத்தவே நிறுத்தாது.

நாம்தான் தினமும் பார்த்துக்கொண்டுள்ளோமே தினசரிகளில், செய்திகளில். இப்போழுது சூடான செய்திகளான 2G ஊழல்கள், விளையாட்டு ஊழல்கள், வீடுகள் கட்டித்தருவதாக போலிச் சான்றுகளுடன் வங்கி அதிகாரிகளே உடன்பட்டு செய்த லட்சம் கோடி ஊழல்கள்,

மேலே சொன்ன அனைவரும் படிக்காத முட்டாள்களா? ஒன்றும் அறியாதவர்களா? அனைவரும் நன்கு படித்த உயர்பதவிகளில் உள்ளவர்கள், ஏன் அவர்கள் படித்த படிப்பு அவர்களை ஒழுங்குபடுத்தவில்லை? வாழ்க்கை நெறியை போதிக்க வில்லை? ஏனெனில் காரணம் அறிந்ததுதான்.

உலகாதாயக்கல்வியில் பணம் பணம் என்று பணம் பன்னத்தான் தெரியுமே தவிர மனதைத் தொடாது, அவர்களை அவர்களின் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டிதராது.

இந்நிலை நம் நாட்டிற்க்குத்தான் ஆபத்துதான், இப்படி பட்டவர்களை வைத்துக் கொண்டு எங்கே இந்தியா வல்லரசாவது? எதை எடுத்தாலும் ஊழல் புதிது புதிதாக ஊழல்.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள் இராணுவத்திலிருந்து கீழ் நிலையில் உள்ள ஊராட்சி துப்புரவாளர் வரையில் அனைத்து துறையினரும் ஏதாவது ஒரு விதத்தில் ஊழலிலோ அல்லது குற்றத்திலோ சம்பந்தப்பட்டுருப்பர்(அதாவது அவர்கள் பணியில் மிக நேர்த்தியோடு இருந்தார்களா? யாரும் தன்னை பார்கவில்லை என்றாலும் தனது கடமையை செய்தார்களா?) இப்பொழுது சிந்திக்கவேண்டும் இவர்களையோ அல்லது இது போன்ற கல்வித்திட்டத்தில் வளரும் குழந்தைகளை வைத்துக்கொண்டா நாம் இந்தியாவை வரலாறு படைக்க வைக்கபோகிறோம்? வாய்ப்பே இல்லை.

இரண்டாம் பகுதியை படிக்க பகுதி 2

Wednesday, October 20, 2010

Followup - பாபர் ஹூமாயூனுக்கு எழுதிய உயில்



எனது முந்தைய பதிவில் பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய கடிதம் என்ற தலைப்பில் ஒரு தகவல் எழுதியிருந்தேன் அது நான் மேடைப்பேச்சில் கேட்டதே, அதை நான் உண்மை என்று என்னால் வாதிட முடியாது.

ஆனால் தற்போது ஆனந்தவிகடன் 13/10/10 பதிப்பில் பக்கம் 106ல் பாபர் தன்னுடைய மகனுக்கு எழுதிய உயிலின் வார்த்தைகள் அப்படியே தங்களின் பார்வைக்கு....

’மகனே! நீ உனது மனத்தை, குறுகிய மத உணர்வுகள், தவறான எண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினர்களும் பின்பற்றுகிற மத சம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும், மத வழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து, பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும். நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச்சேதப்படுத்தக் கூடாது. அடக்குமுறை என்ற வாளைவிட, இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற வாள் மூலம் இஸ்லாமைப் பரப்புவதுதான் அதிக பலன் தரும்’

இப்படி இருக்கும் போது குறிப்பாக அந்த இடத்தில் இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் கோயில் இருந்திருந்தால் அதை எப்படி பாபர் இடிக்கச் சொல்லி இருப்பார். நிச்சயம் இருக்காது...

நன்றி : ஆனந்த விகடன்.

Monday, September 27, 2010

பாபர் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதம்

இது உண்மையா?

ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்திற்க்கு சென்றேன், அங்கு அவர்களில் ஒருவர் ஒரு திரைப்பட டைரக்டரும் கூட அவர் பேசியதிலிருந்து,

பாபர் படையெடுப்பின் மூலம் இந்தியாவை கைப்பற்றி இருக்கலாம் ஆனால் முகலாயர்கள் இந்தியா என்ற ஒன்று இருப்பதற்க்கு முன்னால் சிந்து நதி ஓடும் பிரதேசமான(இந்தியா)விற்கு வந்தார், வென்றார். சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஒருங்கினைத்திருக்கலாம் ஆனால் அதற்கு முன்னால் சிதருண்டு இருந்த இப்பிரதேசத்தை பல நாடுகளாக இருந்த இப்பிரதேசத்தை ஒன்றினைத்தனர் முகலாயர்கள், மற்றும் இப்போதுள்ள வலிமையான நாடு போல இருந்தால் முகலாயர்கள் ஆகட்டும் வெள்ளையர்களாகட்டும் நமது நாட்டை வென்றிருக்க முடியாது,

உடனே பாபருக்கு எதிரானவர்கள் கேட்பது அவர்கள்(முகலாயர்கள்)எப்படி இங்கு படையெடுக்கலாம் என்று அதாவது நமது சின்ன தமிழ்நாட்டில் உள்ள சேர,சோழ, பாண்டியர்களே தங்களுக்கு போரிட்டுக்கொண்டனர் நாட்டிற்க்காக. அப்படி இருக்க பாரசீகத்திலிருந்து சிந்துநதி பாயும் வளமிக்க நாட்டில்(அப்போதைய இந்தியா என்பது இப்போதுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ்) படையெடுத்தனர் முகலாயர்கள்.

சரி விஷயம் இதுதான், அதாவது,

பாபர் டைரிக்குறிப்பெழுதும் பழக்கமுள்ளவர் அவர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் " மகனே இந்தியா என்பது ஹிந்துக்கள் என்ற பசுவை வழிபடுபவர்கள் அதிகம் வாழும் நாடு, நீ அவர்களின் நன்மதிப்பை பெறவேண்டும், நீ பசுவை உண்ணாதே அதன் மூலம் நீ அவர்களின் நன் மதிப்பை பெற முடியும்" என்று கடிதம் எழுதியதாக அந்த கம்யூனிஸ்ட் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அப்படியிருகையில் எப்படி தனது தளபதி இராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் உள்ள ஒரு கோயிலை இடிக்க சொல்லியிருப்பார்? பாபர் எழுதிய கடிதம் இன்றளவும் பாதுகாக்கப் படுவதாக குறிப்பிட்டார். மேலும் பாபரது இந்த செயல் மிகப்பெரும் பரபரப்பாகியிருக்கும் அதை ஒடுக்குவதற்க்காக வேண்டி தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளை அவர் எழுதும் டைரிக்குறிப்பில் குறிப்பிட்டுருப்பார். என்றார் அந்த கம்யூனிஸ்ட்

இது உண்மையா? உண்மைகளை விவாதிக்கலாம்.

Friday, June 25, 2010

மனிதர்களே! நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இல்லை



இனி வர இருக்கும் மனிதர்களே இனி நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இருக்காது, அப்படியே இருந்தாலும் தகிக்கும் மணல் வெளியில்தான் வாழ வேண்டியிருக்கும், இரவில் மட்டுமே நீங்கள் வெளியில் வரமுடியும் பகலில் வர இயலா ஏனெனில் பகலில் உங்களை கரிக்கும் சூடு, விவசாயம் செய்ய பூமி இருக்கும் ஆனால் அதில் ஏதும் விளையா, தண்ணீர் பூமியின் மேற்பரப்பில் எங்கும் காணா, பூமியினுள்ளும் இரா, பச்சை கலரையும் மற்றும் மரத்தையும் புகைபடத்தில் மட்டுமே நீங்கள் பார்க்கலாம்.

உணவு பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆக உங்களது மரணத்தை நீங்கள் சுவைக்க காத்திருக்க வேண்டியதுதான், அது ஒன்று மட்டுமே உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

ஏன் இப்படி, எதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு, காரணம் இருக்கிறது.

காரணம் பூமியில் வேகமாக அழிக்கப்பட்டு வரும் மரங்கள், வயல்கள், காடுகள், நன்னீர் ஏரிகள், குளங்கள், ஆறுகள் இதனால்தான்.




மிகவும் வருத்தத்தக்க விசயம் என்னவெனில் அரசாங்கமே அதை சிறிது சிறிதாக அதை செய்து வருவதும் அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவதும்தான்.

திருவாரூர் பக்கத்தில் ஒரு ஊர் அவ்வூரில் இருக்கும் பஞ்சாயத்தார்களோ படிப்பறிவு அற்றவர்கள் அங்கு ஒரு பொது நோக்கிற்க்காக ஒரு குளம் அழிக்கப்படுகிறது, பிறகு அதே காரணத்திற்க்காக மற்றொரு குளம் வற்ற வேண்டும் என்ற நோக்கில் அதன் சுற்றியுள்ள மக்களை அக்குளத்தினுள் தங்களது குப்பைகளை கொட்ட சொல்லப்படுகிறது.

அக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழியும், வடிகாலும் நாளடைவில் அடைபடுகிறது, முக்கால் வாசி தூர்ந்த பிறகு மாவட்ட ஆட்சியர் வந்து பார்த்து விட்டு வடிகால் வசதியும், நீர்வரத்து முகமும் இல்லாததால் நீங்கள் தூர்த்துவிடுங்கள் என்று சொல்லப்படுகிறது. அதை முடித்தாகிவிட்டது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் - சோழவள நாடு சோறுடைத்து
யார் சொன்னது அதெல்லாம் அந்தக்காலம்.

இந்த இடங்கள் என்றில்லாமல் தமிழகத்தில் வேகமாக வளரும், அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில் உண்டென்றால் அது ரியல் எஸ்டேட் தொழில்தான். நான் கேள்விப்பட்டேன் ஒரு விளைநிலத்தை தரிசாக சிறிது காலம் காண்பித்தால்தான் அதை பிளாட் போட அனுமதிப்பார்கள் என்று, அப்படி 2 வருடம் இந்த விளைநிலங்கள் கிடப்பில் போடப்பட்டு பிறகு பிளாட் போடப்பட்டு 60*40 மட்டும் இலட்சக்கணக்கில் விற்க்கப்படுகிறது.

பெருகிவரும் வாகனப்பெருக்கத்தால் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது, அகலப்படுத்தப்படுகிறது அதற்க்காக சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. முன்பெல்லாம் சாலைகள் போட்டுவிட்டு அதன் இருபக்கமும் மரங்கள் நடப்படும், இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான பழக்கத்தை பார்க்க முடியவில்லை. வெட்டுவதோடு சரி.

நன்கு உற்றுநோக்கினால் வருடா வருடம் நம்மால் வெயில் அதிகரித்து வருவதை உணர முடியும். மழை குறைந்து வருவதும் அல்லது சீக்கிரம் வந்து சென்றுவிடுவதையும் அவதானிக்கலாம்.

பூமியில் ஒரு பகுதியில் வெயில் அதிகரிப்பு மறுபக்கம் கடுமையான வெள்ளம் பேரழிவு.

இவையனைத்திற்க்கும் காரணம் ஒன்றுதான் மரங்கள் வெட்டப்படுவதுதான்.

நியாயமான காரணங்கள்

ஆம் இதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றதுதான்.

வால்பாறை போன்ற இடங்களில் காட்டு மிருகங்களின் தாக்குதல்களும், மலைப்பிரதசங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கும் காரணம் நாம் அவர்களின் குடியிருப்புகளுக்கு மக்கள் வந்ததுதான்,

என்ன செய்ய வீடுகள் பெருக்கம்.

மக்களுக்கு அரசு ஏற்பாடு பண்ணித்தரவில்லையெனில் போராட்டம் நடத்துவார்கள், மற்ற கட்சிகள் அதை அரசியலாக்கும் அல்லது ஆளும் கட்சி மக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து பெயர் தேடிக்கொள்ளும்.

சாலைகள் அமைத்துத்தான் தரவேண்டும் அரசாங்கம், காரணம் வாகனப்பெருக்கம் அதற்கு வழி வகை செய்து கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஒரு பக்குவப்பட்ட மக்கள் நலனில் அக்கரை உள்ள அரசாங்கம் எந்த நாடாக இருந்தாலும் சரியான, தெளிவான சிந்தனையோடு அணுகினால் இந்த பிரச்சினைக்கு வழி தேடலாம்.

மக்கள்தொகை ஒரு நாட்டிற்க்கு பாதிப்பு அல்ல மாறாக அது ஒரு செல்வம்தான். இந்தியாவையும், சீனாவையும் பார்த்து உலகம் அதிசயக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்நாடுகளின் மக்கள்தொகை செல்வம்தான்.

உலகில் உபயோகத்திற்க்கில்லாத இடங்கள் கோடிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேட்பாரற்று கிடக்கிறது. அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து சரியாக முடிவெடுத்து மாற்று குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்து மற்ற விளைநிலங்களை, காடுகளை அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்தளவும் சந்தேகம் இல்லை.

ஆனால் நிலமை நாம் உட்கார்ந்து யோசிக்கும் அளவுக்கு சிறிய விடயம் அல்ல இது. உலகை ஒற்றுமை படுத்த இயலுமா? நடக்குமா? ஒவ்வொரு நாடும் தன் பங்கிற்கு எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக செல்கிறது அதை தடுக்க முடியாது, அதனால் இந்த உலகம் அதன் போக்கிலேயே செல்கிறது , தன் அழிவை நோக்கி பயணிக்கிறது, நாமும் சேர்ந்து பயணிக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

அதனால்தான் சொல்கிறேன் வருங்கால நம் மக்கள் அழியட்டும், வேறு வழியில்லை.

நாம் நிம்மதி பட்டுக்கொள்ள வேண்டியது இப்பொழுதோ அல்லது நாளையோ இந்த நிலை வந்துவிடாது அவ்வளவுதான், நாம் நம் சுய நலத்திற்க்காக வருங்கால சந்ததிகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் இவ்வுலகை நம் இஷ்டத்திற்க்கு வளைத்து நாம் வாழ்ந்து இவ்வுலகை குப்பைக் கூடையாக்கி விட்டு மறைகிறோம்.

ஆனால் வரும் சமுதாயம் நிச்சயம் நம்மை சபிக்கும் என்பது உறுதி.

Friday, June 18, 2010

சுருங்கிவரும் மனித உள்ளங்கள்




இன்றைக்கு செய்தித்தாள்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு தர்மபுரி அருகே கல்யாணத்திற்க்காக சென்ற வேன் விபத்திற்க்குள்ளாக அதில் பயணம் செய்த 18 பேர் இறந்தனர், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவதற்காக வந்தனர் பக்கத்து கிராமத்து மக்கள்.

இறந்த நபர்களின் உறவினர்கள் கல்யாணத்திற்க்காக சென்று பிணமானவர்களின் 200 பவுன் நகைகள் காணவில்லை என்கின்றனர் இப்போது.

அங்கு உதவிக்கு வந்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொது மக்கள். இவர்களில் யாரை சந்தேகப்படுவது. சில விஷமிகள் எடுத்திருக்கலாம் என்கிறது காவல் துறை,

அங்கு உதவிக்கு போன நல்ல உள்ளங்களுக்கு தர்ம சங்கடம் இப்போது.

அந்தளவிற்க்கா நமது உள்ளங்கள் இருளடைந்து போயுள்ளது? ஒரு கோரமான விபத்து நிகழ்ந்திருக்கின்றது வந்தவர்கள் எத்தனைப்பேர் என்ன என்ன கற்பனைகளோடு வந்திருப்பர் தனது வாழ்நாள் இப்படி சட்டென்று முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இறந்து சிதைந்து கிடக்கும் மனித உடல்களைப் பார்த்து வருத்தப்படுவது இருக்கட்டும், தனது உள்ளத்தில் சிரிதளவு இரக்கம் கூடவா இல்லாமல் அந்த பிணங்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடுவார்கள்?

எங்கு செல்கிறது உலகம், எப்படி மாசடைந்தது மனித உள்ளம்.

நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்கள், துரோகம், இன்னும் இதைவிட கொடுமையான விஷயங்கள் எவ்வளவோ நடந்திருக்கும்போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்லதான்.
மற்ற விஷயங்கள் உயிருடனிருக்கும் மனிதர்களுக்கு எதிராக நடக்கும். இங்கு செத்தவர்களுக்கு எதிராக நடக்கிறது அவ்வளவுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான், ஒவ்வொரு தனிமனித உள்ளங்களும் திருந்தவேண்டும், எல்லா விடயங்களிலும். மனித மனம் சுருங்கித்தான் வருகிறது நாளுக்குநாள், நகரங்களில் அடுத்த வீட்டில் இழவு விழுந்தாளும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிவதில்லை.

இப்படியே மனித வாழ்க்கைத்தரம் போனால் என்னவாகும். ஒருவேளை உலகம் அழிந்துவிடும் என்பது உண்மைதான் போல.

அய்கிய அரபு அமீரகம் என்ற துபாயில் சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றேன் அங்கு இறந்த ஒரு இளம்பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொண்ட காரணத்தினால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்ட்டான் என்று, இன்று நடந்த இந்நிகழ்ச்சியும் அதுபோலதான்.

நகைகளை களவாடிய விஷமிகள் யார் என்று கண்டறிந்து கொல்லப்படவேண்டும்.

செய்தி உதவி : thatstamil.com(june 18)

Tuesday, May 25, 2010

குற்றாலதிற்க்கு போகலாம் வாங்க




சுட்டெரிக்கும் வெயில், சாலைகளில் நடக்கவோ,வாகனங்களிலோ செல்ல முடியவில்லை சூடு, எங்கு திரும்பினும் சூடு, போதாகுறைக்கு மின்வெட்டு. இரவிலும் ஓடுகிறது வியற்வை. என்ன செய்ய. இறைவன் அருளால் வந்ததே லைலா. மாற்றிப் போட்டது கால சூழ்நிலையை அதனால் தென் மேற்கு பருவமழை முதலில் தமிழ் நாட்டிலேயே ஆரம்பிக்கப்போகிறது.

கோடையில் மண்டையில் ஏற்ப்பட்ட சூடு தணிய ஏற்ற இடம் குற்றாலம். ஊட்டி, கோடைக்கானல் போன்ற இடங்கள் சூழ்நிலையை குளிராக வைத்துக்கொள்ளும், உடல் சூட்டைத்தணிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இயற்கையான, மூலிகை கலந்த(சில அருவிகளில்)தண்ணீர் எங்கு கிடைக்கும்.ஆக குற்றாலமே சிறந்தது. குளி குளி என்று குளித்துக்கொண்டே இருக்கலாம். சளி பிடிக்காது,ஜுரம் வராது(conditions apply).ஆனந்தம்தான் போங்கள்.

குற்றாலத்திற்கு நம் பஸ் நுழையும் முன்னேயே அவ்வூரின் குளிர் நம்மை வரவேற்கும் , குளிர்ந்த காற்று, காற்றுடன் கூடிய சாரல், ஆஹா தென்காசியை தாண்டியவுடன் நம்மை வரவேற்கும் குற்றாலத்தின் இயற்கை அழகும்,வனப்பும்.

பஸ்ஸை விட்டு இறங்கி வீடு தேடுவது தான் குற்றாலத்தில் நாம் சந்திக்கும் முதல் பிரச்சினை, family ஆக இருந்தால் அதற்க்கு தகுந்தார்போலும், புதிய தம்பதிகள் ஆக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் அமைய வேண்டும் ரூம். எல்லாரும் முன்னிலை படுத்துவது அருவிக்கு பக்கத்தில் தங்கும் இடம் வேண்டும் என்று. அப்படி எதிர் பார்ப்பதால் சீசனில் ரூம் கிடைக்க பெரும் தடுமாற்றம் வரும். போட்டியும் இருக்கும். அதனால் ரூம் சொந்தக்காரர்கள் வாடகையை ஒரே அடியாக உயர்த்தி விடுவார்கள்.

அதனால் குற்றாலத்திற்கு காலையில் போய் இறங்குவது உசிதமல்ல, போனால் மாலையில் போய் இருந்குவது மாதிரி உங்கள் பயணத்தை அமைத்து கொள்ளுங்கள், அப்படி காலையில் போய் இறங்கினாலும் மாலையில் போய் ரூம் தேடுங்கள். நல்ல விலைக்கு கிடைக்கும், குறிப்பாக வாகன வசதி இல்லாதவர்கள் அருவிகளுக்கு பக்கத்திலேயே ரூம் அமையும் படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக சிற்றருவி, மெயின் அருவி போன்ற.

காலையில் ஆரம்பித்து சாயங்காலம் வரையிலும் நீங்கள் குளிக்க முடியாது அவ்வளவு கூட்டம் குளிக்கும் அருவிகளில், அதனால் சோம்பல் பார்க்காமல் காலை 4 மணிக்கு எழுந்து குளிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். ஆனால் பெண்கள் குளிக்க சரியான சமயம் இரவு 12 மணிக்கு அப்புறமும் காலை 5 மணிக்கு முன்பும், ஆனால் ஆண் துணையுடன்.

பகலில் குளிப்பதால் போலீஸ் அடி வாங்க வேண்டியது வரும்.

பெண்களை புடவையுடன் குளிக்க சொல்லாதீர்கள் பெண்களுக்கு nighty என்ற இரவில் உடுத்தும் ஆடையே சிறந்தது, தாவணியுடன்.

குளிக்க போகும்போது எண்ணெய் தேய்த்துக் கொள்ள, மசாஜ் செய்துக் கொள்ள வேண்டி அங்குள்ள யாரிடமும் சென்றுவிடாதீர்கள், அவர்களில் யார் அனுபவம் உள்ளவர்கள் என்று நம்மால் கணிக்க முடியாது.

அதனால் நீங்களோ அல்லது நண்பர்களோ, குடும்பத்தில் உள்ளவர்களையோ தேய்த்து விட சொல்லுங்கள்.அது போதும்.

இரவில் குளிப்பதே சிற்ந்தது, கூட்டமும் இல்லாமல் இருக்கும்.

மது அருந்தி விட்டு குளிக்க செல்லாதீர்கள் அது மிகவும் ஆபத்து,

குற்றாலத்திற்க்கு சென்றவர்கள் பாபநாசமும் சென்று பார்க்கலாம் அகஸ்தியர் அருவி போன்றவை அருமையாக இருக்கும்.

பழைய குற்றாலத்திற்க்கு செல்ல வேண்டாம் தண்ணீர் அதிக நாட்களில் அதிகமாக வராது.

குடும்பத்துடன் சென்றுகுளிக்க சிறந்த இடம் மற்றும் நேரம் இரவே அதுவும் மெயின் அருவியில் மட்டுமே, மற்ற அருவிகளில் இரவில் குளிக்க செல்ல முடியாது.

Tuesday, May 4, 2010

உங்களை அறியாமல் உங்கள் உடல் இளைக்க





நண்பர்களே, இப்பதிவு நம்மைபோல் ஒரு அறையில் அடைந்துகிடக்கும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் தங்களது உடல் நிலை பற்றி கவலை படாமல் இவ்வுலக ஓட்டத்தில் ஒடும் நம்மை போன்றவர்களின் உடல் நலனை காப்பதற்க்காக எனக்குத் தெரிந்த என்னாலான ஒரு சிறிய அறிவுரையே அல்லது வேண்டுகோளே.

எனது அத்தைமகன் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிரார், அவருக்கு ஒருமுறை இருதய அடைப்பும் வந்துவிட்டது, அதற்கு பிறகும் அவர் தனது நலனில் அக்கரை எடுத்துக் கொள்ளாதது எனக்கு வியப்பை ஏற்ப்படுத்தியது அவரது துணைவியார்தான் அவருக்கு மருந்து கொடுத்து அவர் திட்டினாலும் அவர் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்து அவருக்கு உதவி வருகிறார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெளிநாட்டில் அவரது வேலை பளு அவ்வாறு அவருக்கு, தனது நலனில் அக்கரை எடுத்துக் கொள்ள அவருக்கு போதிய நேரமின்மைதான், உடற்ப்பயிற்ச்சி செய்ய சோம்பல் வேறு என்னதான் செய்வது. இது நம்போன்றவர்களிடையே இந்த சோம்பல் படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரி விஷயத்திற்க்கு வருவோம், இரு வாரங்களுக்கு முன்னால் வடக்கத்திய நடிகை ஒருவர் ஒரு வார இதழில் உடலை குறைக்க உடற்பயிற்ச்சியோ, காலையில் எழுந்து ஓடவோ, உணவைக் குறைக்கவோ வேண்டியததில்லை BATMITTON என்ற இறகு பந்தாடுங்கள் போதும் என்று சொல்லியிருந்தார்.

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான் நான் அதை ஆமோதிக்கிறேன், முதலில் நான் ஒரு விளையாட்டு பிரியன் சிறு வயதில் நம் நாட்டிற்க்கே உரிய கிரிக்கெட், பின்பு வாலிபால், பின்பு இறகுபந்து என்று வந்து தற்ப்போது உங்களுக்கு இறகு பந்தையே நான் ஆழமாக சிபாரிசு செய்கிறேன்.


வயது பாரமில்லை

இறகு பந்தில், எந்த வயதினரும் விளையாடலாம், அதே கிரிக்கெட்டோ, வாலிபாலோ 60 வயதிற்கு பிறகு விளையாடுவதென்பது முடியாதது. ஆனால் இறகு பந்தை விளையாடலாம். நீங்கள் இதை சோதிக்க விரும்பினால் உங்கள் ஊரில் உள்ள இறகு பந்து உள்விளையாட்டரங்கில் சென்று பாருங்கள். எனக்கு தெரிந்து எனது ஊரில் என்னுடன் 65 வயது முன்னால் ஆசிரியர் விளையாடுகிறார், அந்தளவுக்கு அவர் ஓடி விளையாட முடியாவிட்டாலும் நன்றாகவே விளையாடுகிறார் என்று சொல்லலாம்.

குறிப்பாக இங்குள்ள அனைத்து உள் விளையாட்டரங்கிலும் அநேகமாக நடுத்தரவயதைத் தாண்டியவர்கள்தான் விளையாடுகிறார்கள்.

பயன்கள்

உள்விளையாட்டங்கம் என்பதால் நீங்கள் ஒரு ஆட்டம் ஆடினாலே வியற்வை கொட்டும், ஒரு 20வயதிலிருந்து நீங்கள் விளையாடுபவர் என்றால் உங்களுக்கு BP, சர்க்கரை, கொழுப்பு, போன்றவை வருவதற்க்கு வாய்ப்பேயில்லை.

இவ்விளையாட்டில் மிக முக்கியமாக சொல்லவேண்டியது நீங்கள் உடற்பயிற்ச்சியோ, ஓடவோ, சாப்பாட்டை குறைத்தாலோ ஒரு கட்டத்திற்க்கு மேல் நீங்கள் சலிப்படைய வாய்ப்புள்ளது ஆனால் இவ்விளையாட்டில் ஆட ஆடுகளத்திற்க்கு இறங்கினால் அடுத்தடுத்த பந்தை திருப்பி அனுப்புவதற்க்கும் உங்களிடம் வந்த பந்தை உடனே எதிர்ப்பக்கம் இடம் பார்த்து அடிப்பதற்க்கும் வினாடிக்கு வினாடி உங்கள் மூளையும் உங்கள் உடம்பும் உங்களை அறியாமல் வேலை செய்து உங்களை அங்கும் இங்கும் ஓட வைக்கும் விளையாட்டு இது.

அதனால் காலையில் விளையாட்டு உங்களை நாள் முழுவதும் நன்றாக இருப்பீர்கள் அல்லது மாலை ஆடினால் நன்றாக தூக்கம் வருவது உறுதி.

வேண்டியவைகள்

இவ்விளையாட்டு கொஞ்சம் காஸ்ட்லியானது, மிரளவேண்டாம் பேட் 1400ரூபாய், அரைக்கால் டிரவுசர் அல்லது முழு டிரவுசர், SAS என்ற ஒரு shoe காலணி உள்ளது அது 575(காலணி அணியாவிட்டால் கால் வலி வருவது உறுதி), விளையாட்டு உள்ளரங்கில் சேர்வதற்க்கு ஊருக்கு தகுந்தார்போல் வாங்குவார்கள் உதா 1200, மாதம் ஒரு 300 அவ்வளவுதான். இதை தற்போது நடுத்தர மக்களும், அதற்க்கு கீழ் உள்ளவர்களும் கொடுக்க முடியும்.(சண்டைக்கு வராதீர்கள், உங்கள் உடல் நலனுக்குத்தான் சொல்கிறேன்)

சாதாரணமாக கடின உழைப்பாளர்கள் எதைப்பற்றியும் கவலை பட வேண்டாம் அவர்களுக்கு அவர்கள் உழைப்பே போதுமானது. உழைக்க வாய்ப்பில்லாதவர்கள். இதை கடைப்பிடிக்கலாம்.

பொது அறிவிப்பு

நீங்கள் ஒரு இருதய நோயாளியாகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, வேறு ஒரு நோய்க்கு வைத்தியம் செய்து கொள்பவர்களாக இருந்தால் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு விளையாட ஆரம்பியுங்கள்.

Friday, April 23, 2010

திருமணத்திற்க்கு முன்னால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது


நமது நாட்டில் மிகவும் உயர்ந்ததாகவும், மதிப்பிற்குரியதாகவும் நாம் அனைவரும் கருதும் உச்ச நீதி மன்றம் என்பது ஒரு நல்ல எண்ணத்துடன் இன்று வரை நம்மால் பார்க்கப்படுகிறது. இன்னும் அது தான் நம் நாட்டில் நலிந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஒரு குழுவினர், ஒரு சமுதாயத்தினர் போன்ற நம் நாட்டில் எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அவர்களுக்கு அந்த நீதியை மீட்டடுப்பதில் உச்ச நீதிமன்றம் அதற்குரிய தனித்தன்மையை தக்க வைத்து கொண்டுள்ளது. உதாரணமாக குஜராத் கலவர கேஸ்களை சொல்லலாம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்தை திசை திருப்பிய, நம் நாட்டு மக்கள் அனைவரையும் புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்த நிகழ்வுதான் இந்த திருமணதிற்கு முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற நீதி பதிகளின் குஷ்பு தாக்கல் செய்த மனுவிற்கான நீதிபதிகளின் கருத்து.

முற்றிலும் இது தவறான கருத்துதான், உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்று சொல்வதன் மூலம் அது சரியான காரணமாக சொல்ல முடியாது, அந்த நீதிபதிகளும் மனிதர்களே, மேலும் அவர்கள் குறிபிட்டுள்ள தீர்ப்பின் படி இதற்கு சட்டப்படியாக ஆணும் பெண்ணும் தனித்து வசிப்பதில் தடங்கல்கள் இல்லை என்று சொன்னார்கள்.

ஆக சுதந்திர இந்தியாவிற்கு living together என்ற திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் முறை, புதிய வாழ்க்கை முறைதான், நமது இந்தியா இது போல சேர்ந்து வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை, நமது இந்திய நீதி மன்றங்கள் சந்தித்திராததன் காரணத்தால் உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் இப்படிப்பட்ட கருத்திற்கு காரணமாக இருக்கலாம்.

எப்படி நோக்கினும் இது புதிய பிரச்சினை தான், ஏனெனில் ஒருவருக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாடில் நமது இந்திய சமுதாயத்திற்கு ஆணும் பெண்ணும் சந்தித்து பேசினாலே குற்றமாகும் என்று நினைக்கும் இந்த சமுதாயத்தில் living together என்ற கலாசார மாறுபாடு நிச்சயம் ஒரு பெரிய பேரிடிதான்.

ஆனால் மேற்குலகிர்கிற்கு இது ஒன்றும் புதிதல்ல, நமக்கு ஒரு பிரச்சினையில் விடை தெரியாவிடில் மற்ற இடம், மற்ற மாநிலம், மற்ற நாடுகளில் இதற்கு இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம். அந்த வகையில் இக்கலாச்சாரம் மற்ற நாடுகளில் ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளை நாம் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.

நம்மை எல்லாம் படைத்த கடவுள் அதாவது நம் மூளையை அதன் செயல் வடிவம் மற்றும் அணைத்து வகையான, இன்னமும் மூளையின் அணைத்து பாகங்களின் முழுமையான செயல்பாடுகளைப்பற்றி மருத்துவ உலகம் கண்டிராத அந்த மூளையை வடிவமைத்து, அது எந்த விசயங்களில் எவ்விதம் அது யோசிக்கும், மேலும் மனிதன் எந்த விஷத்தை கையேலேடுக்க வேண்டும் அது மனிதனுக்கு எவ்விதம் பயன் தரும், அவ்விஷயம் எவ்விதம் மனிதனுக்கு தீங்கு தரும் என்று இறைவன் அறிந்து வைத்திருந்து நமக்கு வழிகாட்டலாக அளித்துள்ளான். அதன் படி வாழ்ந்த மக்கள் நன்றாக வாழ்ந்துள்ளனர், அந்த விதிகளை மீறி அல்லது மனம் போன போக்கில் வாழ்ந்தால் நிச்சயமாக அவ்வித வாழ்க்கை அச்சமுதாயதிர்க்கு தீங்காகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேற்குலகில் இவ்வித வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பெறும் அதன் பக்க விளைவுகள் பற்றி நமது இந்திய சமூகம் அதிகம் அறிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன் . இவ்வித வாழ்க்கை முறை மூலம் மேற்குலகம் பெற்றிருப்பது ஒற்றை பெற்றோர் முறைதான் அதாவது(sings Single Parenting Child).

அதாவது ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழ்க்கை சலிக்கும் வரை வாழ்ந்து, விரும்பினால் பிள்ளைகள் பெற்று பின்பு வாழ்க்கை சலித்த பின்பு விட்டு விட்டு இருவரும் பிரிந்து விடுவார்கள். இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையென்றால் பிரச்சினை இல்லை ஏனனில் அவனோ அல்லது அவளோ வேறு ஒருவரைத் வாழ்கைதுனையாகவோ அல்லது மற்றொரு living together partnar யை தேர்ந்தெடுத்துக் கொள்வர்(அதாவது பிரச்சினை முற்றும் வரையில் அல்லது கிழடு தட்டும் வரையில்)

இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ பிரச்சினை வேறு விதாமாக ஆரம்பம் ஆகும். பிள்ளைகளை அதிகபட்சம் பெண்ணே தக்கவைத்து கொள்வாள். அவ்வாறு தன்னுடன் வைத்து கொண்டு வளர்ந்து வரும் பிள்ளைகளே single parenting child ஆகும். அதாவது தந்தை அல்லது தாய் யாராவது ஒருவருடன் மட்டும் வளரும் குழந்தைகள்.

பொதுவாக குடும்பவியல் அமைப்பு, மற்றும் பிள்ளைகள் கூட்டு குடும்பத்தில் வளர்வது என்பது பிள்ளைகள் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பல்வேறு வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்கிறது.

அதாவது தாயிடமிருந்து எப்படி குடும்பத்தை அனுசரித்து நடத்துவது, மற்றவர்களுடன் எப்படி இணங்கி, கட்டுப்பட்டு வாழ்வது இன்னும் வேறுபல நல்ல விசயங்களையும் , தந்தை இடமிருந்து அப்பிள்ளைகள் வாழ்கையின் போராட்டத்தையும், வாழ்க்கை முறைகளையும், வேறு பல நல்ல பழக்கங்களையும், தெரிந்து கொள்ளும், இப்படி இருக்கையில் அந்த ஒற்றை பெற்றோரிடமிருந்து அப்பிள்ளை என்னத்தை கற்றுக்கொள்ளும். அணைத்து விதமான தீய பழக்க வழக்கங்களை தவிர மேலும் தான் தோன்றித்தனம் இவற்றை தான் கற்று கொள்ளும். வேறு ஒன்றும் அல்ல. நடு நிலையோடு நாம் யோசிக்கவேண்டும்.

குடும்ப அமைப்பு என்பது மனித வாழ்கையில் தவிர்க்க முடியாதது. இன்று எத்தனை முதியோர் இல்லங்கள் எத்தனை அநாதை இல்லங்கள், கேட்பாரற்று கிடக்கும் மனம் குலைந்த நபர்கள் எத்தனை எத்தனை பேர் நாம் பார்க்கிறோம் ரோடுகளில். இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் குடும்ப அமைப்பு சீரழிந்தது தான்.

நாம் முடியாதவர்களாக, வயதானவர்களாக படுத்து இருக்கும் போது நாம் பெற்றெடுத்த ஆணோ பெண்ணோ அவர்களை நாம், நம் பிள்ளைகளை ஒழுக்கமாகவும், நல்ல நெறிமுறைகளுடனும் நல் வழியில் வளர்த்து இருந்தோமானால் பிற்காலத்தில் நம்மை நம் குழைந்தைகள் பராமரிப்பார்களா மாட்டார்களா? அது தான் குடும்பம், தந்தையிடமிருந்து மகனுக்கும், தாயிடமிருந்து மகளுக்கும் மற்றும் பாட்டி, தாத்தா இவர்களிடமிருந்து நாமும் நமது குழந்தைகளும் அன்றாடம் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
living together சமுதாயத்தில் வாழ்ந்து single parenting ல் வளர்ந்த குழந்தைகள் எப்படி உங்களுக்கு பாதுகாப்பாய் அமைவார்கள் என்று நீங்கள் உறுதி கொள்ள முடியும்.

நமது குழந்தைகள் நாம் பெற்ற பிள்ளைகள் நம் கண் முன்னாடியே சீரழிவதை நீங்கள் பார்த்துகொண்டு இருப்பீர்களா?

நண்பர்களே கடந்த 2 வருடங்களுக்கு முன்னால் வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை என்று தலைப்பிட்டு தினமணியில் ஒரு தலையங்கம் . அதாவது மக்கள் தொகை ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது என்று சொல்லி இருந்தது அக்கட்டுரை . இது எதன் பாதிப்பால் ஏற்பட்டது? இந்த living together என்ற கலாசார சீர்கேட்டினால்தான்.
living together வாழ்க்கை முறையில் பாதிக்கபடுவது அதிகம் பெண்களே அதாவது குழந்தை பேறு என்பது அவரவர் விருப்பபடியே livingtogether அமைப்பில். எனவே அத்தம்பதி தனக்கு குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்து பிறகு வயது வந்தவுடன் வாழ்க்கை சலிப்பு தட்டி பிரிய நேரிட்டு அப்புறம் வயது, வாழ்க்கை, இளமை எல்லாம் கடந்து வாழ்க்கை முடிந்து ஒன்றுக்கும் உதவாமல் அப்பெண் போய் விடுவாள். பிறகு அப்பெண்ணோ அல்லது ஆணோ யோசித்து என்ன பயன் சொல்லுங்கள்.

அறிவியல் முறைப்படி ஒரு பெண் அதிகபட்சம் அவளுக்கு மாதவிடாய் நின்று போனால் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஆண்களால் 70 வயதிலும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும், living together வாழ்கையில் அந்த ஆண் சலிப்பு தட்டியவுடன் பிரிந்து சென்று விட்டு பெண்ணை நிற்கதியில் விட்டு விட்டு போய் விடுவான். பிறகு அந்த பெண்ணை அரவணைக்க அவரது பெற்றோர்கள் இருப்பார்கள் என்பதோ அல்லது சகோதர சகோதரியோ தன்னை அரவணைபார்கள் என்று சொல்ல முடியுமா(அந்த சகோதர சகோதரியோ அவர்களும் living together வாழ்கையில் இல்லாதிருக்க வேண்டும், இருந்தால் எப்படி புதிதாக ஒருவரை அரவணைப்பார்கள் ) ஆனால் அந்த ஆண் வேறு ஒரு வாழ்க்கை தேர்ந்து எடுத்துக்கொள்வான்.

இ ப்படி இதை நாம் ஆதரித்தால் நாம் நிச்சயம் ஆணாதிக்கமிக்கவர்களாகவே நாம் நடந்து கொள்கிறோம். நாம் பெற்ற பெண் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா? நடு நிலையுடன் சிந்தியுங்கள்.

இதற்கு உதாரணமாக இக்கருத்தை ஆதரிப்பவர்கள் எடுத்துக்காட்டாக சுட்டிக்கான்பிப்பது கமல்ஹாசன் என்ற நடிகரை, அவர் முன்பு சரிகாவுடன் வாழ்ந்து இப்பொழுது பிரிந்து வாழ்க்கை நடத்துகிறார். பிரிந்து போன சரிகா பணம் படைத்தவராக இருந்தால் பரவாயில்லை ஆனால் அவரோ பிழைப்பிற்காக ஒரு படத்தில் அரை குறை ஆடையுடன் ஒரு பாட்டிற்கு வந்து சென்றார் என்று கேள்விபடுகின்றோம், ஆனால் பாதிக்கப்பட்ட(பெண்)வர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவரின் எதிர்காலம் என்ன? நீதிபதிகளும் , இவ்வாழ்க்கை முறையை ஆதரிப்பவர்களும் தான் பதில் சொல்லவேண்டும்.

இதை இவ்வள்வு முக்கியதுவம் கொடுத்து பார்க்கவேண்டுமா என நீங்கள் கேட்கலாம் சில வார இதழ்களில் இது பற்றிய கட்டுரைகள் வந்த பிறகுதான் நான் இதை பற்றி எழுத தோணியது.