Pages

Wednesday, January 26, 2011

பெண்களும்-வேலையும்-அவர்கள் படும் அல்லல்களும்

இந்த தலைப்பிற்கு உடனே பதில்கள் பறந்து வரும்.

பெண்ணியக்கவாதிகள், பெண்களுக்காக போராடுபவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் போன்றவர்களிடமிருந்து, பதில் எதிர்பார்த்ததுதான்.

ஆம், நாங்கள் இராணுவத்தின் அனைத்து துறையிலும், விமானம் முதல் வியாபாரம் வரை நாங்கள் இருக்கிறோம் என்பர், நாங்கள் இல்லாத துறைகளே இல்லை என்பர். சரிதான்.

ஆனால் பெண்கள் வேலை செய்ய ஏற்ற உடற்கூறு கொண்டவர்கள் இல்லை என்று சொல்பவர்களை, ஆணாதிக்கம் பிடித்தவர்கள், பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்கள், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்கள் என்பர்.

  அவர்கள் கோபம் நியாயமானதே எமக்கும் அவர்களை போகப்பொருளாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை, நாம் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்களும் இல்லை. சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எண்ணி வருந்துபவர்களில் நாமும் உண்டு.
                                                                                  பெண்கள் உடற்கூறு ரீதியாக, கடின வேலைகள், அழுத்தம் நிறைந்த வேலைகள் செய்வதற்க்கு ஏற்ற அமைப்பை கொண்டவர்கள் கிடையாது அறிவியல் ரீதியாக.

சாதாரணமாக ஆண்கள் அலுவலகத்தின் பணியை தவிர வீடுகளில் வேலை செய்வதில்லை, வந்து அமர்ந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடுவர். ஆனால் இதே போன்றா பெண்கள் நிலை? முற்றிலும் வேறு.

இன்றைக்குத்தான் ஒரு வலைப்பூவில் காண நேர்ந்தது “நகரமா .....நரகமா” என்ற இளந்தூயவனின் வலைப்பூவில் அவர் எழுதிய ஒரு பத்தியை அப்படியே தருகிறேன் பாருங்கள்..

//எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.//

மேலே சொன்னதில் இளந்தூயவன் சாதாரண வேலைக்கு செல்லாத பெண்ணை பற்றி சொல்லி இருக்கிறார் ஆனால் இதற்கு இடையில் வேலைக்கும் சென்று வரவேண்டும் பெண்கள், அப்படி இருந்துவிட்டால் அவர்களின் நிலைமையை எண்ணி பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

அதாவது 24 மணி நேரத்தில் 8-10 மணிநேரம் ஆண்கள் வேலை செய்கின்றார்கள் என்றால் 24 மணி நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்மணிகள் 15 மணிகளுக்கு மேலாக வேலை செய்கிறார்கள், அலுவலகம் செல்லும் முன்பும் பின்பும். இதுதான் சமூகம் அவர்களுக்கு தரும் விடுதலையா? இதை சொன்னால் நாங்கள் ஆணாதிக்கவாதிகளா?

பெண்களுக்கெதிரான கொடுமைகள்

10 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்வே; வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிப்பெண்கள் இவர்களிடம் கேட்கப்பட்டது தாங்கள் யார் யாரால் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று?

பதிலில் தங்களது பணியிடங்களில், கல்லூரி நண்பர்களிடம், கார் ஓட்டுனர்களிடம் மற்றும் சொந்தங்கள் என்று சொன்னார்கள்.

இன்றுவரை வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் சொல்லி மாளாது. சமீபத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடங்களில் டெல்லிதான் முதலிடம் வகிக்கிறது.

சமீபத்தில் RAW என்ற இந்திய உளவுத்துறையில் தனது மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். இதுபோன்ற இன்னும் எவ்வளவோ...

அமெரிக்காவில் பில் கிளிண்டனது காலத்தில் இராணுவத்தில் பெண்கள் பிரிவை ஏற்படுத்த அந்த பெண்கள் தங்களது மேலதிகாரிகளால் பெருமளவு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக பில் கிளிண்டன் பாரளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

அமெரிக்க இராணுவத்தின் ஒரு சர்வே:

  • 2007ல் அமெரிக்க இராணுவத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2688,
  • 41% பெண்கள் இராணுவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளாகினர்
  • ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2% லிருந்து 13% அதிகரித்து வருகிறது
  • ஒரு இராணுவ வீரன் எதிரியை வீழ்த்துவதை விட அதிகமாக எண்ணிக்கையில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.
  • 2008ல் இராணுவத்தில் மட்டும் 1516 பாலியல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன
  • 3ல் 1 பகுதி பெண்கள் தாங்கள் இராணுவத்தில் பணியாற்றும்போதுதான் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானோம் என்று தெரிவித்துள்ளனர். 
எனக்கு தெரிந்து ஒரு அலுவலகத்தில் ஏதுமறியா ஒரு பெண் வேலைக்கு சேர்ந்து அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம், மிக உயர்ந்த மேலதிகாரி யாரும் இல்லாத நேரத்தில் தனது அருகில் நின்றுகொண்டு அதை செய் இதை செய் என்று ஏவியவாறு அசிங்கமான செயல் செய்வதாகவும் நான் அவர் முகத்தை பார்க்கவில்லை என்று சொல்லி சங்கடப்பட்டார்.

ஒரு ஆண் சமயம் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தான் ஆண் நீ பெண் என்பதை நிரூபிப்பான்.

சமூகத்தில் திருமண மாகத பெண்கள் வேலைக்கு செல்வதை பெண்ணுரிமை என்று கருதுகின்றனர். ஆனால் திருமணம் முடித்து அவளது கடமைகளையும் பிறரது கடைமைகளையும் முடித்து விட்டு வேலைக்கு சென்று படும் அல்லல்களை கருத்தில் கொண்டு பொதுவாகத்தான் இந்த விடயத்தை உற்று நோக்கவேண்டும்.

தவறு என்பது எல்லா இடத்திலும்தான் நடக்கும் அதற்காக பெண்கள் வேலை செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேட்க முடியாது, ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் சிந்திக்கவேண்டும்.

போகப்பொருள்

அது ஒரு விளம்பரம், உலகின் மிக உயர்ந்த காருக்கான சந்தையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பரம், 

காருக்கு முன்னே அரை குறை ஆடையுடன் இரண்டு பெண்கள், 
குரல் ஒலிக்கிறது எங்கள் கார் இன்ன இன்ன வசதிகள் கொண்டது வேண்டுமானால் ஓட்டிப் பருங்கள் என்று. எதை? காரையா? அல்லது ..........

இதில் யார் போகப் பொருள், யார் ஆக்குகிறார்கள் இந்த நிலைமையை? இதை நாங்கள் சொன்னால் நாங்கள் பெண்ணடிமைவாதிகள்..

இதை பெண்ணுரிமை பேசுபவர்கள் புரிந்து கொள்வதில்லை.

முன்னர் டெல்லியில் உள்ள காவல்துறை உயரதிகாரி பெண்களும் தங்களது ஆடைகளை மற்ற ஆண்களை கவரும் விதமாக உடுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று சொன்னார்.

பெண்களின் ஆடைகளிலும் தவறுகள் இருக்கிறது,


எனினும் இது மிகப்பெரிய விடயம், இதை இவ்வளவு சுருக்கமாக விவாதித்து விட முடியாது. சில விஷயங்களை மட்டுமே கோடிட்டு காட்ட முனைந்துள்ளேன்.

தகவல்கள் உதவி: இளந்தூயவன், Sexual Assault of Women in the Military(by:Lexy Mayer and Joe Endress)





இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment