Pages

Friday, June 18, 2010

சுருங்கிவரும் மனித உள்ளங்கள்




இன்றைக்கு செய்தித்தாள்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு தர்மபுரி அருகே கல்யாணத்திற்க்காக சென்ற வேன் விபத்திற்க்குள்ளாக அதில் பயணம் செய்த 18 பேர் இறந்தனர், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவதற்காக வந்தனர் பக்கத்து கிராமத்து மக்கள்.

இறந்த நபர்களின் உறவினர்கள் கல்யாணத்திற்க்காக சென்று பிணமானவர்களின் 200 பவுன் நகைகள் காணவில்லை என்கின்றனர் இப்போது.

அங்கு உதவிக்கு வந்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொது மக்கள். இவர்களில் யாரை சந்தேகப்படுவது. சில விஷமிகள் எடுத்திருக்கலாம் என்கிறது காவல் துறை,

அங்கு உதவிக்கு போன நல்ல உள்ளங்களுக்கு தர்ம சங்கடம் இப்போது.

அந்தளவிற்க்கா நமது உள்ளங்கள் இருளடைந்து போயுள்ளது? ஒரு கோரமான விபத்து நிகழ்ந்திருக்கின்றது வந்தவர்கள் எத்தனைப்பேர் என்ன என்ன கற்பனைகளோடு வந்திருப்பர் தனது வாழ்நாள் இப்படி சட்டென்று முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இறந்து சிதைந்து கிடக்கும் மனித உடல்களைப் பார்த்து வருத்தப்படுவது இருக்கட்டும், தனது உள்ளத்தில் சிரிதளவு இரக்கம் கூடவா இல்லாமல் அந்த பிணங்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடுவார்கள்?

எங்கு செல்கிறது உலகம், எப்படி மாசடைந்தது மனித உள்ளம்.

நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்கள், துரோகம், இன்னும் இதைவிட கொடுமையான விஷயங்கள் எவ்வளவோ நடந்திருக்கும்போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்லதான்.
மற்ற விஷயங்கள் உயிருடனிருக்கும் மனிதர்களுக்கு எதிராக நடக்கும். இங்கு செத்தவர்களுக்கு எதிராக நடக்கிறது அவ்வளவுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான், ஒவ்வொரு தனிமனித உள்ளங்களும் திருந்தவேண்டும், எல்லா விடயங்களிலும். மனித மனம் சுருங்கித்தான் வருகிறது நாளுக்குநாள், நகரங்களில் அடுத்த வீட்டில் இழவு விழுந்தாளும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிவதில்லை.

இப்படியே மனித வாழ்க்கைத்தரம் போனால் என்னவாகும். ஒருவேளை உலகம் அழிந்துவிடும் என்பது உண்மைதான் போல.

அய்கிய அரபு அமீரகம் என்ற துபாயில் சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றேன் அங்கு இறந்த ஒரு இளம்பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொண்ட காரணத்தினால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்ட்டான் என்று, இன்று நடந்த இந்நிகழ்ச்சியும் அதுபோலதான்.

நகைகளை களவாடிய விஷமிகள் யார் என்று கண்டறிந்து கொல்லப்படவேண்டும்.

செய்தி உதவி : thatstamil.com(june 18)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

உங்களில் ஒருவன் said...

dear பனித்துளி சங்கர்,

எனக்கு புரிய வைத்ததற்க்கு நன்றி.

Ahamed irshad said...

Nice...

Riyas said...

நல்ல பதிவு..

Post a Comment