Pages

Monday, September 27, 2010

பாபர் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதம்

இது உண்மையா?

ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்திற்க்கு சென்றேன், அங்கு அவர்களில் ஒருவர் ஒரு திரைப்பட டைரக்டரும் கூட அவர் பேசியதிலிருந்து,

பாபர் படையெடுப்பின் மூலம் இந்தியாவை கைப்பற்றி இருக்கலாம் ஆனால் முகலாயர்கள் இந்தியா என்ற ஒன்று இருப்பதற்க்கு முன்னால் சிந்து நதி ஓடும் பிரதேசமான(இந்தியா)விற்கு வந்தார், வென்றார். சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஒருங்கினைத்திருக்கலாம் ஆனால் அதற்கு முன்னால் சிதருண்டு இருந்த இப்பிரதேசத்தை பல நாடுகளாக இருந்த இப்பிரதேசத்தை ஒன்றினைத்தனர் முகலாயர்கள், மற்றும் இப்போதுள்ள வலிமையான நாடு போல இருந்தால் முகலாயர்கள் ஆகட்டும் வெள்ளையர்களாகட்டும் நமது நாட்டை வென்றிருக்க முடியாது,

உடனே பாபருக்கு எதிரானவர்கள் கேட்பது அவர்கள்(முகலாயர்கள்)எப்படி இங்கு படையெடுக்கலாம் என்று அதாவது நமது சின்ன தமிழ்நாட்டில் உள்ள சேர,சோழ, பாண்டியர்களே தங்களுக்கு போரிட்டுக்கொண்டனர் நாட்டிற்க்காக. அப்படி இருக்க பாரசீகத்திலிருந்து சிந்துநதி பாயும் வளமிக்க நாட்டில்(அப்போதைய இந்தியா என்பது இப்போதுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ்) படையெடுத்தனர் முகலாயர்கள்.

சரி விஷயம் இதுதான், அதாவது,

பாபர் டைரிக்குறிப்பெழுதும் பழக்கமுள்ளவர் அவர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் " மகனே இந்தியா என்பது ஹிந்துக்கள் என்ற பசுவை வழிபடுபவர்கள் அதிகம் வாழும் நாடு, நீ அவர்களின் நன்மதிப்பை பெறவேண்டும், நீ பசுவை உண்ணாதே அதன் மூலம் நீ அவர்களின் நன் மதிப்பை பெற முடியும்" என்று கடிதம் எழுதியதாக அந்த கம்யூனிஸ்ட் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அப்படியிருகையில் எப்படி தனது தளபதி இராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் உள்ள ஒரு கோயிலை இடிக்க சொல்லியிருப்பார்? பாபர் எழுதிய கடிதம் இன்றளவும் பாதுகாக்கப் படுவதாக குறிப்பிட்டார். மேலும் பாபரது இந்த செயல் மிகப்பெரும் பரபரப்பாகியிருக்கும் அதை ஒடுக்குவதற்க்காக வேண்டி தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளை அவர் எழுதும் டைரிக்குறிப்பில் குறிப்பிட்டுருப்பார். என்றார் அந்த கம்யூனிஸ்ட்

இது உண்மையா? உண்மைகளை விவாதிக்கலாம்.