Pages

Thursday, February 10, 2011

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் "சமூக விடுதலை”


சமீபத்தில் ஒரு நிகழ்வு..

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தனது மெய்காப்பாளரை தனது ஷூவை துடைக்கச் சொல்கிறார், இதை சிறிதும் எதிர்பாராத அந்த அதிகாரி குனிந்து துடைக்கிறார், (வேறு என்ன செய்ய முடியும்).

இவர் துடைத்துக் கொண்டிருக்க அவர் மற்றவர்களுடன் தனது பேச்சை தொடர்ந்துள்ளார்.

மாயாவதி இதுபோல் சர்ச்சையில் முதல் தடவை அல்ல.

எத்தனையோ கோடி ரூபாய்க்கு தொண்டர்களால் மாலை அணிவித்தது, அரசு செலவில் தனக்கு சிலை என அவர் தன்னால் முடிந்த தொண்டை(!) செய்துதான் வருகிறார்.

இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றி என நினைப்பார்களோ, ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வளவோ ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் ஆனால் இவர் என்னவென்றால்.......

தான் ஒரு ஒடுக்கப்பட்டவர் என்று பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிவந்து அனைவரையும் கவர்ந்தார், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராகிவிட்டார் இந்தியா முன்னேறி வருகிறது என்று நினைத்தவர்களுக்கு மாயாவதியின் செயல்கள் சதிலீலாவதி போல் இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாகதான் உள்ளது.

தனது ஷூவை துடைத்தவர் மேல் ஜாதி அதனால் அவர்களை இழிவு படுத்த நினைக்கிறாரா? அல்லது ஒரு ஆணை தன் கீழ்படிய வைத்த நினைப்பா? என்னவென்று தெரியவில்லை.

இதுதான் சாதி ஒழிப்பில் ஈடுபட்ட தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமா? இது போன்ற நிகழ்வுகள்தான் அனைத்து மக்களுக்கும் ஜாதியின் கொடுமை பற்றி பறை சாற்றும் விதமா?

இந்த நிகழ்வை பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? அதை நான் இங்கு எழுதினால் சர்ச்சையாகிவிடும். 

நாமும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை, 

இங்கிருக்கும் ஒரு ஒடுக்கப்பட்டவர்களுக்கான கட்சியின் மாவட்ட பொருப்பில் இருப்பவர் செய்யும் கூத்து இருக்கிறதே சொன்னால் ஒரு கட்டுரை போதாது, சகோதர சமுதாயத்தை தாக்குவதாகட்டும், கட்டப்பஞ்சாயத்தாகட்டும் இன்னும் எவ்வளவோ, இது அந்த கட்சித் தலைமைக்கும் தெரிந்திருந்தும் எந்த வித நடவடிகையும் இல்லை அவர்மேல்.

நான் கேட்கிறேன் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் சமூக விடுதலை என்பது இதுதானா? 


மற்ற சமூகத்தினர் தன்னை “மரியாதையுடன்” நடத்தவேண்டும் என ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் நினைப்பது இப்படித்தானோ?


மிகவும் வருந்த தக்க விஷயம் என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்த்த தலைவர்களை பற்றித்தான்.

செய்தி உபயம் பாலைவனத்தூது










இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment