Pages

Wednesday, February 9, 2011

எருமை மாடும், விவசாயமும்


முன்பெல்லாம் நல்லா படிக்காத என்னை போன்ற மக்கு பிள்ளைகளை பெற்றோர்கள் திட்டுவார்கள், படிப்பு ஏறலைன்னா போய் எருமை மாடு மேய்க்க வேண்டியதுதான் என்று.

இப்பொழுது அப்படி சொல்ல முடியாது ஏனெனில் மாடு மேய்பதென்பது நல்ல வருமானமுள்ள, நிம்மதியான தொழில் இன்றைய நிலையில்.

அதிலும் எருமை மாடு மேய்பதென்பது அதை விட அருமையான லாபம் தரக்கூடிய தொழில், பால் அடர்த்தி மிகுந்தது. அதனால் பிள்ளைகளை திட்ட வேறு ஏதாவது புதிதாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் இப்பொழுது இவ்வித தொழில்களை யாரும் செய்வதற்கு முன் வருவதில்லை. வருங்காலத்தில் நமது நாட்டு எருமை மாடுகளை நம் பிள்ளைகளுக்கு பள்ளி பாட புத்தகத்தில்தான் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.

வருங்காலத்தில் உலகில் லாபம் தரக்கூடிய தொழில் ஒன்று உண்டென்றால் அது நிச்சயம் விவசாயமாகத்தான் இருக்கும், 


ஆனால் சோழ வள நாடான தஞ்சை தரணியிலேயே விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது, தற்போது உள்ள கல்வி சூழ்நிலை,மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் போன்றவற்றால் அதிகம் பாதிப்படைந்தது விவசாயமும், நிலங்களும்தான்,

அதிகமும், உடனேயும் பணத்தை அள்ளும் வேலைகளுக்குதான் மவுசு அதிகம் மாணவர்களிடையே.. பின்பு என்ன...யார் உட்கார்ந்து... விவசாயம் படித்து....முன்னேறி...எப்பொழுது பணம் சம்பாதிப்பது.......இதெல்லாம் எப்பொழுது நடக்கும்.....

ஆனால் அதிசயதக்க விதத்தில் வருங்காலத்தில் விவசாய நிலம் வைத்திருப்பவர்தான் மிகுந்த மரியாதைக்குரியவராக இருப்பார் என்பது நிச்சயம்.

விட்டால் நகர வளர்ச்சிக்காக காடுகளின் மேலும் கைவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


பாரதியார், காணி நிலம் வேண்டும்,
அழகிய மாளிகை வேண்டும்
அதில் 10 தென்னை மரங்கள் வேண்டும்
அங்கு குயில் வரவேண்டும்,
தென்றல் வரவேண்டும்,
 என்று பாடுவார்,  கேட்க நல்லாத்தான் இருக்கு


வரும்காலத்தில் இதைபோல் ஏட்டிலும், கற்பணையிலும் பார்த்தால்தான் உண்டு, 
                                 
ஆக எல்லோரும் இப்பவே காணி நிலத்தையும், எருமை மாடுகளையும் வாங்கி சேமித்து விடவும், பிற்காலத்தில் உதவும், பிளாட் போட இல்லை நமக்கு நாமே விளைத்து சாப்பிடுவதற்கு...








இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment