Pages

Thursday, December 23, 2010

பேரரசர்கள் அழுவதில்லை

அன்பு நண்பர்களே,

பேரரசர் பகதூர் ஷா ஜாபர்அவர்கள் இந்தியாவை ஆண்டு வந்த சமயம், 

வெள்ளையர்களுக்கு கட்டுப்படாத ஒரு ஆட்சி,

முடிவெடுக்கிறார்கள். வெள்ளையர்கள் போர் செய்து ஒடுக்குகிறார்கள் அவரை, கைது செய்து நாடு கடத்தப் படுகிறார்,

அரசரும் அவரது புதல்வர்களும் கப்பலில் பர்மா அல்லது மியான்மர் கல்கத்தா மார்க்கமாக கொண்டு செல்லப் படுகிறார். 

அவருக்குத் தெரியும் நாம் திரும்பி வரமாட்டோம் என்று அதனால் தான் ஆட்சி செய்த நாட்டின் மீது அளவிளாத அன்பின் காரணத்தால் போகும் போது ஒரு கைப்பிடி இந்திய மண்ணை எடுத்துச் செல்கிறார்.

கப்பலில் பேரம் நடக்கிறது அவரை அடிபணிய வைக்க, மிரட்டப்படுகிறார். தங்களுக்கு கப்பம் கட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைக் காட்டப் படிகிறார், தனது புதல்வர்களை கொன்று விடுவதாகவும் பயமுறுத்தப்படுகிறார்.

மசியவில்லை.

சிறிது நேரம் கழித்து அவருக்கு துணியால் போர்த்தப்பட்ட ஒரு தட்டு வருகிறது, ஆங்கிலேய அதிகாரி புன்னகையுடன் வந்து தட்டில் உள்ள துணியை அகற்றுகிறான்

தட்டில் தனது 2 புதல்வர்களின் தலை,, பேரரசர் பகதூர்ஷா அவர்கள் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

இதைக் கண்ட ஆங்கிலேய அதிகாரிக்கு ஆச்சர்யம், கோபம், வெறுப்பு, புதல்வர்களைக் கொன்றதன் மூலமும் அதை அவரிடமே காண்பித்தன் மூலமும் பகதூர்ஷாவை மனதளவில் காயப்படுத்த நினைத்த ஆங்கிலேய அதிகாரிக்கு அதிர்ச்சி, முகத்தில் எவ்வித மாற்றங்கலும் இல்லாமல் பகதூர்ஷா இருப்பதை கண்டு.

அதை பகதூர்ஷாவிடமே கேட்கிறான் நீங்கள் கலங்கவில்லையா, அழவில்லையா என்று அதற்கு பகதூர்ஷா அவர்கள் பதிலளிக்கிறார்கள் பேரரசர்கள் அழுவதில்லை. என்று

ஒரு கம்யூனிஸ்ட் சகோதரர் கூட்டத்தில் பேசியதிலிருந்து.....
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment