Pages

Tuesday, December 28, 2010

We Ate Poison - Follow up

 நமது சென்ற We Ate Poison பதிவில் நாம் உண்ணும் உணவில் விஷம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பதை Outlook ன் முந்தைய கட்டுரையை மேற்கோள் காட்டி சொல்லி இருந்தோம்.

தற்போது அதற்கேற்றார்போல் கேரளாவில் பிரபலமான பத்திரிக்கையான Manorama online ல் கடந்த டிசம்பர் 20ம் தேதி அதே போன்றதொரு கட்டுரை வந்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார், அவரை நான் அதை மொழிபெயர்த்துக் கேட்டேன் முடியவில்லை வேலைப் பளு காரணம் என்றார். ஆனால் அதற்க்குண்டான சுட்டியை(மலையாளத்தில் அதை பார்க்க இங்கே சுட்டவும்) அனுப்பித் தந்திருந்தார் அதற்க்காக அவருக்கு நன்றிகள் பல.
 
அதேபோல் விகடனில் எழுதிவரும் சாரு நிவேதிதா அவர்களும் கேரளாவில் எண்டோசல்பான் என்ற பூச்சிமருந்தை குறிப்பிட்டு கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு எடுத்த முயற்ச்சியின் காரணத்தால் அங்கு அந்த மருந்தை தடை செய்ததாக எழுதியிருந்தார்.

மிகவும் மகிழ்ச்சி,

மற்றெல்லோரும் விழித்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் என்ன முயற்சி செய்வான் என்று தெரியவில்லை. 

முயற்சி செய்து ஏதாவது உருப்படியாக செய்தால் நன்றாக இருக்கும்.

அல்லது இயற்கை வேளாண்மைக்கு அனைவரும் திரும்பினாலும் மிகவும் நன்றாக இருக்கும், வயதானவர்கள் சொல்வார்கள் முன்பிருந்தது போல ஏது இப்போதுள்ள உணவில் சத்து கிடைக்கிறது என்பர். அந்த காலத்தில் நடந்த இயற்கை வேளாண்மையால் உடம்பிற்க்கு சத்து நிறைய, அதனால் கடின உழைப்பு செய்ய முடிந்தது, ஆனால் இப்போது சட்டி சோறு திண்ணாலும் அரை கிலோமீட்டர் கூட ஓட முடியவில்லை.
              
 என்ன செய்வது நாம் பருகும் நீர், உண்ணும் உணவு அனைத்திலும் விஷம், அதன் காரணத்தால் நிறைய மனிதர்களுக்கு உள்ளத்திலும் விஷம்......

நன்றி: சாரு நிவேதிதா, Manoramaonline.com




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment