Pages

Wednesday, January 12, 2011

என்ன தலைப்பென்று தெரியவில்லை

இந்தியா.......
வருங்கால வல்லரசு,,,,,,,,,,,,,

 உலகப் பொருளாதாரம் அதிகம் பாதிப்படைந்தாலும் பாதிப்படையாத வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடு, 


இந்தியர்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துக்கொண்டுள்ளனர்,
இந்தியர்களின் சந்தையில் நுகரும் பொருட்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துக்கொண்டுள்ளன,...
                                                                          எல்லாம் சரிதான் கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் இந்த நவநாகரீக இந்தியர்களின் மனம் எப்படி உள்ளது.....நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டுதானிருக்கிறது, ஆம்.

எங்கள் ஊரில் கடந்த ஞாயிறு ஒரு முதியவர் ரோட்டில் விழுந்து கிடந்தார் அரை மயக்கத்தில், உடலிலும் காலிலும் காயங்கள், சிறுநீர் அதே இடத்தில் கழித்திருந்தார். அருகில் கடை வைத்திருப்பவர்களிடம் விசாரிக்கையில் தெரியவில்லை என்றார்கள்,
                                                   எந்த ஊர்? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்றால் அழுகிறார். நமக்கு மனதை பிசைகிறது, சிறு கூட்டம் கூடிற்று, அங்குள்ள ஒரு பெண் ஒருவர் சொன்னார் “உனக்கு இந்த கதியென்றால் உன்னை இப்படி விட்டவனுக்கு எந்த கதியோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

 இந்தியாவில் முதியோர்களை வீதிகளில் கவனிப்பாறற்று விடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுள்ளது, இதில் அதிகம் சிங்கார சென்னை. அதாவது தமிழகம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்,

நம் அனைவருக்கும் தாய் என்றால் பாசம் அதிகம் அப்படி இருக்கையிலேயே எத்தனையோ தாய்மார்கள் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் தந்தை என்றால் சிறிது இளக்காரம்தான்.

படித்தவர்கள் அல்லது நகரங்களில் வசிப்பவர்கள் தனது பெற்றோர்களை ரோட்டில் விட மாட்டார்கள் டீசண்டாக முதியோர்கள் இல்லத்தில் விடுவர், கிராமங்களில் அப்படி இல்லை ஏதாவது சண்டை சச்சரவுகள் வந்து பெற்றவர்களை திட்டிவிட்டால் ரோஷம் வந்து ”இவன் கையால் நான் ஏன் சாப்பிட வேண்டும்” என்று,  வீட்டை விட்டு வந்து விடுவர்.

அதனால்தான் கிராமங்களை ஒட்டியுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் அதிகம் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கலாம்.

இதில் முக்கியமாக குடிப்பழக்கமும், மருமகள்கள் சண்டையும் காரணங்களாக அமையும்.

கல்லாகிக் கொண்டு வரும் மனித உள்ளங்களுக்கு மத்தியில் நமது வருங்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறிதான்.

இந்த கட்டுரைக்கு எந்த தலைப்பு வைப்பது என்று கூட அதிக சிரத்தை எனக்கு எனெனில் மேம்போக்காகவும், சினிமா செய்திகளை விரும்பி படிக்கும் நம் பதிவர்களிடையே, நெஞ்சை சுடும் உண்மைகளை படிக்கும் பழக்கம் இல்லாத பதிவர்களுக்கு மத்தியில், என்ன இருக்கிறது இதில் என்று அவர்களை படிக்க வைக்க கவரும் தன்மையுள்ள தலைப்பு வேண்டுமே என்றுதான்.

வருங் காலத்தில் நான் ஒரு முதியோர் காப்பகம் வைத்துள்ளேன் தங்களால் இயன்றதை உதவுங்கள் என்று சொன்னால் “ இவனை ஏன் நாம் இப்போது பார்த்தோம்” என்று மனிதர்கள் நினைப்பார்கள் போல.

மான்களையும், கொக்கு போன்றவைகளை உணவிற்க்காக கொன்றால் கைது  அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கும் அரசாங்கம் மனிதன் ரோட்டில் கிடந்தால் பரவாயில்லையா? நல்லா இருக்கு 

இதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா!!!!!!!!!!!!!!!!!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

பத்மா சுவாமிநாதன் said...

கடவுள் ஏன் கல்லானான்?
மனம் கல்லாய் போன மனிதர்களாலே...

Anonymous said...

unarvu ellathavan penathaku samam. penam tani yaga tan erukum.

Post a Comment