Pages

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Wednesday, September 28, 2011

முரட்டு மவுனம்


நம் மக்கள் கடைபிடிக்கும் மவுனம் இருக்கிறதே!!! அந்த முரட்டு மவுனம் அசாத்தியமானது, ஆம். உலகில் உலகத்தை விடுங்கள் இந்தியாவில் மற்ற மக்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமலும், பட்டும் படாமலும், விட்டு விடுவதில் நம் மக்களுக்கு நிகர் யாருமில்லை,
உதாரணத்திற்கு, தலித்கள் விடுதலை- அவர்களுக்காக போராடும் கட்சிகள் அவர்களை ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன் படுத்துவது அறிந்ததே ஆனால் இன்று நேற்றல்ல காலா காலம் தொட்டும் அவர்கள் பாதிக்கப்படுவது அதற்காக யாரும் வலிமையாக குரல் கொடுத்ததாக தெரியவில்லை அம்பேத்கர், பெரியார் தவிர்த்து.

அண்மையில் நடந்த பரமகுடி சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு சும்மா ஒரு வாய்மொழி அறிக்கையோடு சரி. தலித்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது, அவர்களுக்காக போராடுபவர்களும் தாங்கள் slogan களாக வைக்கப்படும் திருப்பி அடி, திருப்பி புடி etc...ஒன்றும் புரியவில்லை நமக்கு. கூட்டத்தை காண்பித்து சீட் வாங்கி உட்கார்ந்தாகி விட்டது அவ்வளவுதான் ஏனெனில் கூட்டணி ஆயிற்றே ஒன்றும் பேச முடியாது.
வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் அரச பயங்கரவாதத்தை பற்றி  நம் தலைவர்கள் பேசுவதே இல்லை, அதாவது அவர்களுக்கு தெரியாது போலும் மற்ற செய்திகளை பற்றி, நாட்டில் பிற பகுதியில் என்ன நடக்கிறது என்ற கவலை கிடையாது போலும் டெல்லிக்கு போய் வருவதோடு சரி. பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் பரிந்து பேசுவோர் இல்லை.
காஷ்மீரில் வாரத்திற்கு ஒரு முறை காணாமல் போகும் நபர்கள் பற்றி, நமது இராணுவம் நிகழ்த்தும் வல்லுறவுகள் பற்றி, நடையில் உள்ள கடுமையான சட்டங்கள் பற்றி, ஒரு மாநிலமே அந்த மக்களே சில வருடங்கள் பின் தங்கிய நிலைபற்றி, இவையெல்லாவற்றையும் பற்றி அந்த மக்கள் தனது குடும்பத்தோடு தெருவில் வந்து போராடினாலும், ஒரு நாதியில்லை சீண்டுவதற்கு, ஆதரவாக குரல் கொடுக்க யாருமில்லை, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை.


நன்றாயிருக்கிறது நம்மவர்கள் காக்கும் இந்த முரட்டு மவுனம்













Monday, September 19, 2011

ஒரு சார்பு போராட்டங்கள்


கடந்த வாரம் பாலிமர் டிவியில் ஒரு விவாதம், ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைக்காக காத்திருப்பவர்களை தூக்கில் போடக்கூடாது என்பவர்களும் - எதிர் தரப்பில் காங்கிரஸாரும் விவாதித்தனர்.

அதில் பேசிய அருள்மொழி என்ற வழக்கறிஞர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் “குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிப்படுபவர்கள் தண்டனை பெற்று விட்டனர், ஆனால் அதற்கு பிறகு நடந்த கலவரத்தை இன்னார் வந்து என்னை கற்பழித்தார், இன்னார் தான் வந்து இவ்வளவு கொலை செய்தார் என சுட்டி காட்டப்படுபவர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர். இதுதான் நீதியா அதனால்தான் தூக்கு தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறோம் என்றார்.
குஜராத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக யாரும் தமிழகத்திலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

   ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டபிறகு, காஷ்மீரின் பரூக் அப்துல்லாஹ் இன்னும் சிலர் அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றும்வோம் என அறிக்கை விடுத்தனர். உடனே கொக்கரித்தனர்் காவிகள்.

கூட்டு மனசாட்சியின்(!!!) அடிப்படையில் தூக்கு விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அருந்ததி ராய் மற்றும் அவரது குடும்பமும்,  மனைவியும் தான் நீதிக்காக போராடுகிறார்கள். 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

வடகிழக்கின் காந்தி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா. 10 வருடம் உண்ணாமல் போராடி வருகிறார் வடகிழக்கில் வழக்கில் உள்ள கடுமையான சட்டங்களை நீக்க கோரி. 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

நாம்  இந்தியர்கள் என்றால் நீதி எல்லோருக்கும் தானே!  இவர்களுக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்ததாக தெரிய வில்லை.
நாம் இன்னும் பழமையில்தான் இருக்கிறோம். அதாவது, என் மொழி பேசுபவன் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் போராடுகிறோம், மற்றவர்கள் மற்ற மாநிலத்தவர்கள், மற்ற மொழி பேசுபவர்கள் என்றால் ஒரு அறிக்கை கூட விடுவதில்லை. ஆனால் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் இ.வெ.ரா பெரியார் இன்றுள்ள தலைவர்கள் போல் அல்ல, கேரளாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆனால் தற்போது மொழி என்ற இந்த குறுகிய வட்டத்திற்க்குள் இருந்து கொண்டு தன் மொழிச்சார்ந்தவருக்காக போராடுபவர்கள் எப்படி நீதி மான்கள் ஆவார்கள், அவர்கள் எப்படி நியாயமான அரசியல் வாதிகள் ஆக முடியும்? அவர்கள் எப்படி ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்கள்? அவர்கள் யாரக இருந்தாலும் என்ன? எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன அல்லது சமீபமாக ஈழ விடுதலைக்காக(!) கவனிக்கத்தக்க வகையில்  நெடுங்காலமாக போராடும் நெடுமாறன்கள் ஆகட்டும் அல்லது புதிதாக வந்து தொண்டை கிழிய பேசும் சீமான்களாகட்டும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!!!