Pages

Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Wednesday, September 28, 2011

முரட்டு மவுனம்


நம் மக்கள் கடைபிடிக்கும் மவுனம் இருக்கிறதே!!! அந்த முரட்டு மவுனம் அசாத்தியமானது, ஆம். உலகில் உலகத்தை விடுங்கள் இந்தியாவில் மற்ற மக்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமலும், பட்டும் படாமலும், விட்டு விடுவதில் நம் மக்களுக்கு நிகர் யாருமில்லை,
உதாரணத்திற்கு, தலித்கள் விடுதலை- அவர்களுக்காக போராடும் கட்சிகள் அவர்களை ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன் படுத்துவது அறிந்ததே ஆனால் இன்று நேற்றல்ல காலா காலம் தொட்டும் அவர்கள் பாதிக்கப்படுவது அதற்காக யாரும் வலிமையாக குரல் கொடுத்ததாக தெரியவில்லை அம்பேத்கர், பெரியார் தவிர்த்து.

அண்மையில் நடந்த பரமகுடி சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு சும்மா ஒரு வாய்மொழி அறிக்கையோடு சரி. தலித்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது, அவர்களுக்காக போராடுபவர்களும் தாங்கள் slogan களாக வைக்கப்படும் திருப்பி அடி, திருப்பி புடி etc...ஒன்றும் புரியவில்லை நமக்கு. கூட்டத்தை காண்பித்து சீட் வாங்கி உட்கார்ந்தாகி விட்டது அவ்வளவுதான் ஏனெனில் கூட்டணி ஆயிற்றே ஒன்றும் பேச முடியாது.
வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் அரச பயங்கரவாதத்தை பற்றி  நம் தலைவர்கள் பேசுவதே இல்லை, அதாவது அவர்களுக்கு தெரியாது போலும் மற்ற செய்திகளை பற்றி, நாட்டில் பிற பகுதியில் என்ன நடக்கிறது என்ற கவலை கிடையாது போலும் டெல்லிக்கு போய் வருவதோடு சரி. பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் பரிந்து பேசுவோர் இல்லை.
காஷ்மீரில் வாரத்திற்கு ஒரு முறை காணாமல் போகும் நபர்கள் பற்றி, நமது இராணுவம் நிகழ்த்தும் வல்லுறவுகள் பற்றி, நடையில் உள்ள கடுமையான சட்டங்கள் பற்றி, ஒரு மாநிலமே அந்த மக்களே சில வருடங்கள் பின் தங்கிய நிலைபற்றி, இவையெல்லாவற்றையும் பற்றி அந்த மக்கள் தனது குடும்பத்தோடு தெருவில் வந்து போராடினாலும், ஒரு நாதியில்லை சீண்டுவதற்கு, ஆதரவாக குரல் கொடுக்க யாருமில்லை, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை.


நன்றாயிருக்கிறது நம்மவர்கள் காக்கும் இந்த முரட்டு மவுனம்