Pages

Monday, February 28, 2011

மக்களை பிடித்த தீராத பிணி - வட்டி


ஈரான் மற்றும் இன்ன பிற ஆசிய நாடுகளில் ஒரு டீ குடிப்பதற்கு ஒரு பை நிறைய பணம் எடுத்து செல்ல வேண்டும், அந்த அளவுக்கு அந்த நாடுகளின் நாணய மதிப்பு அதள பாதளத்தில் வீழ்ந்து விட்டதனால்தான் அப்படி ஒரு நிலை

சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை கவனித்தோமானால் மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும், நல்ல உடை உடுத்தி பல மாதங்களாகியிருக்கும் அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் தாழ்ந்து போயிருக்கும், உணவு, உடை, இருப்பிடத்திற்க்கான போராட்டம் மிகைத்திருக்கும். காரணமும் அதேதான் அவர்கள் நாட்டு நாணய மதிப்பு ஒன்றுமில்லாமல் போயிருந்த காரணத்தினால்தான். 

உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி பேரிடியாக இருந்த சமயத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எந்த அளவிலும் பாதிக்கபட வில்லை.

ஆனால் நமக்கு தெரியாமல் உள்ள சீரியஸான விஷயம் ஒன்று உள்ளது அதுதான் நாட்டின் மீதுள்ள கடன் சுமை,

இந்தியாவின் கடன் சுமை 33 லட்சம் கோடிகள்

தமிழ் நாட்டின் கடன் சுமை 1 லட்சத்து 4000 கோடிகள்

இது வருடா வருடம் அதிகரித்து வருவதுதான் வேதனை, எனக்கென்ன நான் நிம்மதியாக உள்ளேன், நான் சம்பாதிக்கிறேன், சொத்துக்கள் சேர்க்கிறேன், வங்கி இருப்பு இவ்வளவு என நாம் நிம்மதியாக இருந்து விட முடியாது. நம் நாட்டின் நாணய மதிப்பு ஒரே இரவில் சரிந்தால் நிலை, நம் பணகட்டுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

உலகில் ஒரு பக்கம் பணம், பணம் இருப்பவர்களிடம் சேர்வதும் ஏழைகள் மேலும் ஏழைகளாக போவதற்க்கும் முழு முதற் காரணமாவது வட்டியை சார்ந்த பொருளாதாரமே.

ஆனால் நாம் இதை யாரும் உணர்ந்து கொள்வதாகவே தெரிய வில்லை,

உதாரணத்திற்க்கு ஒரு பொருளின் உற்பத்தி விலை 2 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நிறுவனமோ அல்லது அதன் உற்பத்தியாளரோ பட்ட கடனுக்கு வட்டியாக ஒரு தொகை அந்த பொருளின் மேல் வைக்கப்படுகிறது அதற்கு பிறகு நம் கைக்கு அப்பொருள் 10 ரூபாய்க்கு வந்து கிடைக்கும்.

இதிலிருந்து யார் அந்த மறைமுக வட்டிக்கு காசு கொடுக்கிறோம், மக்கள்தான். இதனால்தான் அனைத்து பொருட்களும் அதன் உற்பத்தி விலையுடன் லாபம் சேர்த்து குறைந்த விலைக்கு விற்க முடியும் ஆனால் அந்து நிறுவனம் பட்ட கடன், வட்டி எல்லாம் சேர்ந்து அந்த பொருளின் மேல் விடிகிறது , அப்பொருள் அத்தியாவசியமானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் தலை மேல் சுமந்து கொள்ள நேரிடுகிறது.

இங்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி என பல கந்து வட்டிகள் மக்கள் முன்னிலையில் இருந்தாலும் அதை அனைவரும் தவறு என்று மறுப்பதிற்க்கில்லை. ஆனால் நம்மை ஆண்டிகளாக்கும் நம் கண்களுக்குத் தெரியாத வட்டிகள் நாட்டில் மலிந்துள்ளன. 

இதனால் நாடு ஏதோ செழிப்படைவது போல் இருந்தாலும் அதன் வேரை செல்லரித்து விடுகிறது இந்த வட்டி. அதனால் நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியவே முடியாது ஆனால் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடும் பொருளாதார கொள்கை தான் இந்த வட்டியை சார்ந்த பொருளாதாரக் கொள்கை.

நம் நாட்டில் வட்டியில்லாத முதலை(Capital) நம் அரசே கொடுத்து, யார் தொழில் செய்ய முன் வருகிறார்களோ,யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு சொத்து அல்லது வேறு உத்திரவாதத்துடன் வட்டியில்லாத வகையில் தொழில் தொடங்க ஊக்குவித்து பாருங்கள், அந்த நபர் எவ்வளவு உற்சாகத்துடன் அந்த தொழிலில் ஈடுபடுவார் என்று. உற்பத்தி பொருட்கள் மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கப்பெறலாம். இதை இல்லை என்று யாராலும் மறுக்க முடியுமா?

ஒரு பக்கம் உணவிற்கான இடங்கள் குறைந்து வருவது மற்றொரு பக்கம் வட்டியை சார்ந்த பொருளாதாரத்தால் நாட்டில் ஏழைகள் அதிகரிப்பு, ஆக மொத்தம் வரும் காலத்தில் இந்தியா மற்றொரு நாட்டிற்கு தானாகவே காலணியாவதை யாராலும் தடுக்க முடியாது.

பின்பு உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் நாட்டில் உள்நாட்டு போர், கலகங்கள் என்று நாடே சீர்கேடாகிவிடும் ஆப்பிரிக்க நாடுகள் போல.

வட்டி என்ன அவ்வளவு மோசமானதா? நாம் என்ன ரொம்ப பேசுகிறோமா? இல்லை உண்மை இதுதான். பெரிய கம்பெனிகள் முதல் அன்றாடங்காய்ச்சி வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் ஒரு முக்கியமான நோய்தான் இந்த வட்டி.

உங்களுக்கு அருகில் உள்ள யாராவது வியாபாரியிடம் போய் நீங்கள் வட்டியில்லாம் கடன் பெற்று வியாபாரம் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. அவர்களுக்குதான் அதன் அருமை தெரியும்.

நம் நாட்டில் உள்ள வங்கிகளை அனுகினால் அவர்கள் ஏராளமான விவசாயத்தொழில்களுக்கு கடனும் அரசாங்க மானியமும் தருவதாக சொல்வார்கள், மானியம் போக மீதி உள்ள தொகைக்கு வட்டி கட்டிதான் ஆகவேண்டும். 

அதனால்தான் நாட்டில் விவசாயிகள் தற்கொலைகள் நடப்பதை பார்க்கிறோம். இது எதனால்?

நான் அந்த அளவில் பொருளாதரத்தில் வல்லுனர் அல்ல ஆனால் எனக்கு தெரிந்த வகையில் வட்டியின் கொடுமை பற்றி சொல்ல முனைந்துள்ளேன்.

உலகில் சில நாடுகளில் வட்டியில்லாத வங்கிகளும், இந்தியாவில் சில குழுக்களும் வட்டியில்லாத கடனை கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. இன்னும் வட்டியில்லாத வங்கியின் நடைமுறைகளை நான் அறியும் பட்சத்தில் அதை தனி பதிவாக வெளியிடலாம்.

நன்றி
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

CheersChandru said...

வட்டியின் வலியை உணர்த்தி
பொருளாதாரத்திற்கு ஒரு புது வழியை காட்டும் முயற்சி நன்று !
என் மனம் கவர்ந்த கருத்துக்கள்!
எழுதியமைக்கு வாழ்த்துக்கள்!

உங்களில் ஒருவன் said...

நன்றிகள் பல அன்பர் CheersChandru அவர்களுக்கு

Post a Comment