Pages

Monday, February 21, 2011

பெண் குழந்தைகள்


இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக சொல்கிறது ஆய்வு.

இன்றும் பெற்றோர்களிடையே, இந்திய மக்களிடையே பெண் குழந்தைகள் என்றால் சிறிது இளக்காரம்தான். 

இன்றும் கசப்பாகத்தான் இருக்கிறது தனக்கு பெண் குழந்தைகள் பிறந்தது என்றால்.

அதனாலேயே அனுதினமும் அழிக்கப்பட்டுவருகிறது பெண் சிசுக்கள்,
படித்தவர்கள், பாமரர்கள் என்றில்லாமல் பெண் சிசுக்கொலைகள் நமது நாட்டில் நடந்து வருவது வருந்தத்தக்க விஷயம்.

முன்னொரு காலத்தில் ஒரு விவாதம் அதாவது பெண்களுக்கு ஆன்மா இருக்கிறாதா என்றொரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது, பின்பு பெண்களை அடிமைகளாகவும், பிள்ளை பெற்றுத்தரும் பொருளாகவும் பார்க்கப்பட்டனர்.

மதகுருமார்களால் வெருப்புக்குள்ளானார்கள் பெண்கள். பெண்கள் என்றால் அசிங்கம், தீட்டு என்று பலவாறாக.

அதன் தொடர்ச்சிதான் பெண்களை வெறுப்புக்கண்ணோடு பார்க்கத்தோன்றியது. சமூகத்தில் ஒருவருக்கு பெண் குழந்தை பெற்றால் அது இழுக்காக பார்க்கப்பட்டது தொடர்ச்சியாக அது பெண் குழந்தைகளை அழிக்கத்தூண்டியது.

ஆனால் இன்று இத்தனை ஆண்டுகள் கடந்தும், இவ்வளவு கொள்கைகள், கோட்பாடுகள், நாகரீகம், நவீன யுகம், இண்டெர்நெட் என்று எவ்வளவோ இருந்தாலும் இந்திய மக்கள் மட்டும் ஏன் இப்படி திருந்தவே மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்சொன்ன வருடத்திற்கு 50 லட்சம் கருக்கொலைகள் என்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே.

இதிலிருந்து இந்த படித்த நவீன யுகத்திலும், 2020ல் உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நிகழும் நிகழ்வுகள் நம்மை காட்டுமிராண்டிகளாகதான் காட்டுகின்றன.

பெண்கள் நாடாளுகிறார்கள் அனைத்து துறையிலும் கோலோச்சுகிறார்கள் அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு வலைப்பூதளத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அந்த வலைப்பூவின் பெயர் மறந்து விட்டேன், அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எதார்தத்தை பெண்குழந்தைக்ளின் அல்லது பெண்களின் உண்மை நிலவரத்தை ஒரு பெற்றோராக இருந்து அனுபவபூர்வமாக சொல்கிறார், பெண்குழந்தைகள் ஆண் குழந்தைக்கு மேலானவர்கள் என்று. ஒரு பெண்குழந்தை பெற்றால் பாக்கியசாலி இரண்டு பெண்குழந்தைகள் பெற்றால் மகா பாக்கியசாலி என்று.

அதேதான் நானும் சொல்லவருவது தற்பொழுது நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகளும், இந்திய குடும்பங்களை உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம் பெண்குழந்தைகளின் மேன்மையை.

ஒரு ஆண் குழந்தைக்கு வயதுக்கு வந்தவுடன் குடும்பம் உறவினர்கள் தவிர வேறொரு வாழ்க்கை இருக்கிறது அவனுக்கு, வெளியில் என்ன வாழ்க்கை வாழ்கிறான் என்பதையும், எங்கு போகிறான் எங்கு வருகிறான், அவனது வெளிஉலக பழக்கம் என்ன, பழக்கவழக்கங்கள் என்ன, அவனது அறிவு எதை நாடுகிறது, என்பதை எல்லாம் நாம் அறிந்து கொள்ளமுடியுமா? மிகப்பாரமானதும், மிகச் சிரமமானதுமான விஷயமாக்கும் அது.

அதனால்தான் எத்தனையோ ஒழுக்க சீலர்களான பெற்றோர்களுக்கு ஒழுக்கக்கேடு உடைய பிள்ளைகள் இருப்பதை பார்க்கிறோம்.

அதே ஒரு பெண்குழந்தை வயதுக்கு வந்தவுடன் அவளை எளிதில் கண்காணித்து விடலாம், எப்படியும் வீட்டிற்கு வந்து விடுவாள், வீட்டில் சிறிது உஷாராக இருந்தாலே கெட்டு போவதற்கு உண்டான வழிகளை அடைத்துவிடமுடியும் பெற்றோர்களால். மேலும் எதார்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் நிறைந்தவர்கள் பெண் குழந்தைகள்.

சரி இது ஒருபக்கம் இருக்கட்டும், நாம் வயதானால் நாம் நல் ஒழுக்கங்களை பேணிவளர்த்த ஆண் பிள்ளைகள் நம்மை கண்ணியப்படுத்தும் என்பது எந்தளவுக்கு உறுதியாக நம்பமுடியும், முடியாது. ஒரு மனிதனது வாழ்வு இரண்டு முக்கிய தருணங்களில் மாறுகிறது ஒன்று அவன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது மற்றொன்று திருமணத்திற்கு பின்பு.

சம்பாதித்த பிறகு கூட சரியாகி விடும் மனிதன், இரண்டாவது விஷயத்தில் திணருகிறான். லேசான மனக்கசப்புகளுக்கு கூட அவன் பெற்றோர்களை கடிந்து கொள்வதில் ஆரம்பித்து, முதியோர் இல்லங்களில் வந்து முடிகிறது சில பெற்றோர்களுடைய வாழ்க்கை.

இந்த விஷயங்களில் பெண்பிள்ளைகள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆதலால் ஒரு பெண் பிள்ளையானால் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் இரண்டு பெண்குழந்தைகளானால் மாகா பாக்கியசாலிகளே.






இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Anonymous said...

ஒரு பெண் பிள்ளையானால் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் இரண்டு பெண்குழந்தைகளானால் மாகா பாக்கியசாலிகளே. -- பெரும்பாலும் இது உண்மையே -- லாலி

Post a Comment